ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள்
✝பைபிள் வசனங்கள் - A + Jesus Christ Never Fails + A பழைய ஏற்பாடு லேவியராகமம் அதிகாரம் 13 ஆகையால் , இரணமாம்சத்தை ஆசாரியன் காணும்போது , அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன் ; இரணமாம்சம் தீட்டுள்ளது ; அது குஷ்டம் . அல்லது , இரணமாம்சம் மாறி வெண்மையானால் , அவன் ஆசாரியனிடத்துக்கு வரவேண்டும் . ஆசாரியன் அவனைப் பார்த்து , ரோகமுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால் , ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன் ; அவன் சுத்தமுள்ளவன் . சரீரத்தின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய் , அவ்விடத்திலே ஒரு வெள்ளைத்தடிப்பாவது சிவப்பு கலந்த ஒரு வெள்ளைப்படராவது உண்டானால் , அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும் . ஆசாரியன் அதைப் பார்த்து , அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திருக்கவும் , அதின் மயிர் வெள்ளையாக மாறியிருக்கவும் கண்டால் , ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கவேண்டும் ; அது புண்ணில் எழும்பின குஷ்டம் . லேவியராகமம் 13 : 15-20 வேதம் வாசிப்போம் ... சௌரா டிரஸ்ட் & சௌரா குருப்ஸ் சென்னை - 68 . Soura RR Edits - ShareChat