ShareChat
click to see wallet page
search
ஏப்ரல் 4, 1968 - வரலாற்றில் இன்று - - அமெரிக்காவின் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் டென்னிசி மாநிலத்தில் மெம்பிசு நகரில் படுகொலை செய்யப்பட்டார். . . அமெரிக்காவில் இனவெறியை எதிர்த்து அகிம்சை வழியில் போராடியவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். லூதர் கிங், “எனக்கு ஒரு கனவு உண்டு” என்ற தலைப்பில் 1963ம் ஆண்டு லூதர் கிங் நிகழ்த்திய உரை வரலாற்றில் பொறிக்கப் பட்டுள்ளது.. அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க பல போராட்டங்களை நடத்தினார். மேலும், வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது, அதை எதிர்த்து அகிம்சை வழியில் போராடினார். இதற்காக லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த மார்ட்டின் லூதர் கிங், 1968ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி, டென்னிசி மாகாணம் மெம்பிஸ் என்ற பகுதியில் உள்ள லோரைன் ஓட்டல் பால்கனியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்ற வெள்ளைக்கார நிறவெறியர் ஜேம்ஸ் ஏர்ல் ராய்க்கு 99 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்ட பின், அவர் தங்கியிருந்த அறையில் யாரும் தங்கவில்லை. அதன்பின் அந்த ஓட்டல் மார்ட்டின் லூதர் கிங் நினைவைப் போற்றும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. #life #lifes
life - நாயகன் மார்டின்லூதர்கிங் எனக்கு ஒருகனவுஉண்டு நாயகன் மார்டின்லூதர்கிங் எனக்கு ஒருகனவுஉண்டு - ShareChat