#வேடிக்கை என் கதையை படிங்க....
நேத்திக்கு ஒரு பேய் படம் பார்க்க நைட் ஷோ போயிருந்தேன்.
அப்பவே சொன்னானுங்க பசங்க...
அந்த படத்த போயி... அதுவும் நைட்டுல... தனியா... வேணாம்ன்டா...'ன்னு....
ஷோ முடிஞ்சப்ப நைட்டு ஒரு 12.45 மணி இருக்கும்...
செம திகிலான பேய் படம்...
அரண்டு இருண்டடிச்சுப் போய் தியேட்டறவிட்டு உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் வெளியே வந்து நின்னேன். எல்லாரும் போய்டாங்க நான் மட்டும் தனிய.
படம் முடிஞ்சு வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்ன ஆட்டோவ காணோம்.
அட்டோ ட்ரைவருக்கு ஃபோன் பண்ணா.. "சார், டயர் பஞ்சர்... ஒட்டிகிட்டுருக்கன்... லேட்டாகும்... நீங்க வேற ஒரு ஆட்டோவில வீட்டுக்கு போய்டுங்க..."ன்னு சொன்னார்.
ரொம்ப நேரம் வெய்ட் பண்ணியும் வேற ஆட்டோ கெடைக்கல...
மெல்ல இருட்டில் நடக்க ஆரம்பிச்சேன்...
பேய் படம் பார்த்த எபெக்ட். ஒரே பீதியா இருந்துச்சு. கும்முன்னு இருட்டு வேற. கரண்ட்டும் இல்லை...
என் அடிமனசு திக் திக்ன்னு ஒரு கலக்கு கலக்குச்சு...
திடீர்னு அந்த இருட்டுல லைட்டே போடாம ஒரு பஸ் வந்துச்சு. அதுவும் என் ஏரியாவுக்கு போற வண்டி...
வண்டி ரொம்ப மெதுவா சத்தமில்லாமல் நகர்ந்து வந்துச்சு...
கை காட்டியும் அது நிக்கல...
பேய் படம் பாத்த effect என் மனசுலேருந்து மறையல...
யோசிக்காமல் ஓடிப் போய் பின் பக்கம் வண்டியில் ஏறிட்டேன்...
டிரைவர் மாத்திரம் உட்கார்ந்திருந்தார்...
சுத்தும் முத்தும் பாத்தா, வண்டியில நான் மட்டும்தான்.நாலவது சீட்ல பம்மி போய் உக்காந்துட்டேன்...
என்ஜின் சத்தம் கேக்கலை...
கண்டக்டர், பாசன்ஞர்ஸ் யாரும் இல்லை...
ஆனால் வண்டி மெதுவாக நகர்ந்துகிட்டே இருந்துச்சு...
என் ஹார்ட்டு படக் படக் னு அடிச்சுகிட்டே இருக்கு...
நடக்கறதெல்லாம் ஒரு வேளை நாம பாத்த பேய் படத்தோட பார்ட் 2வா இருக்குமோன்னு எனக்கு ரொம்பவே பயம் வர ஆரம்பிச்சிருச்சு...
என்னோட இறைவனை நினைத்துக்கிட்டு அவூதுபில்லாஹி சொல்லிக்கிட்டேன்
நான் மட்டும் இன்னைக்கி ராத்திரி முழுசா வீடு போய் சேர்ந்துட்டா கால்நடையா ஏர்வாடி
நாகூரு சினியப்பா பக்கிரப்பா எல்லாத்தையும் நினைச்சுகிட்டே இருக்குறப்ப...
திடீர்ன்னு என்ஜின் பகுதியிலேருந்து ஒரு பெரிய சத்தம்...
டிர்ர்ர்ர்ர்...டுர்டுர்டுர்ர்ர் னு இஞ்சின் ஸ்டார்ட் ஆயிடுச்சு...
பஸ்ஸுக்குள்ள... வெளில ஹெட்லைட் எல்லாமே எரிய ஆரம்பிச்சிச்சி...
தட தடனு கண்டக்டரும் சுமார் 7லு 8 பயணிகளும் வண்டிக்குள் ஏறினாங்க...
கூட்டமா.
உள்ள உக்கார்ந்து இருந்த என்னை பார்த்து,
கேட்டாங்க பாருங்க...
"எருமை மாடு, எருமை மாடு...
வண்டி நின்னு போச்சுன்னு இவ்வளவு பேரு பின்னாலே இருந்து உயிரை குடுத்து தள்ளிகிட்டிருக்கோம்...
நீ ராஜா மாதிரி ஏறி உக்காந்துகிட்டியே...😬😣
அறிவு இருக்கா உனக்கு..?!!!😣 எரும எரும னு திட்டு வேர வெட்கமா போச்சு சீ சங்கடமா போச்சு இதுக்கு பேய் படம் பரவாயில்லைப்பா...
சித்திக்பாய் ...


