ShareChat
click to see wallet page
search
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 வருடங்களுக்கு முன் பழனி மலையில் நடந்த நிகழ்வு. முருகர் தரிசனம் ஆண்டிகோலத்தில் simple ஆக. கூட வந்த உறவினர்களுக்கு ஏமாற்றம். ராஜஅலங்காரத்தில் முருகனை தரிசிக்காமல், ஆண்டிகோலத்தில் பார்த்தல் அவ்வளவு சிறப்பு அல்ல என்று ஒரே வருத்தம். எந்த கோலத்தில் இருந்தாலும் முருகர் முருகர்தானே என்று சொன்னது எல்லாம் அவர்களிடம் எடுபடவில்லை. ஆழமாக முருகனாகிய கந்தனின் உட்பொருளே காந்த தத்துவம் என்று விளக்கினால்,புரிந்து கொள்ளும் சிந்தனை பக்குவம் இல்லை. தரிசனம் முடிந்து போகர் தரிசனம் முடிந்து, பிரகாரத்தில் அமர்ந்திருந்த போதும் இதே புலம்பல். அப்போது எங்கள் அருகில் அமர்ந்திருந்த காவி தரித்திருந்த பெரியவர் ஒருவர் மெல்லபுன்னகைத்தார். நல்ல தேஜஸ்.பளிச்சென்று இருந்தார். எங்களை பார்த்து நான் ஒரு எளிய விளக்கம் சொல்லட்டுமா? என்று கேட்டார். சொல்லுங்க சாமி " என்றார் எங்கள் உறவினர். ராஜ அலங்காரம் கண்ணுக்கு நிறைவாக இருக்கும். நமக்கு மகிழ்வை தரும். எப்படி நாம் உலக இன்பங்களிலேயே துய்த்து துய்த்து அதிலேயே ஆழ்ந்து போய், எப்படி நாம் இந்த உலகிற்கு வந்த நோக்கத்தை மறந்து இதுவே சாசுவதம் என்று நினைக்கிறோமோ அது போல. இது எல்லோரும் விரும்பும் வாழ்க்கை. எனவே மனம் அதில் லயிக்க விரும்புகிறது. ஆனால் ஆண்டிகோலம் எல்லா ஆசாபாசங்களையும் துறந்த மெய்பொருள் நிலை.ஆதிநிலை.துறவற நிலை. நாம் எங்கிருந்து இந்த உலகிற்கு வந்தோமே, அங்கேயே நம் பிறவியறுத்து சங்கமிக்க வேண்டும் என்று உணர்த்தும் தெய்வீக குறியீடு. மனதை உலக இன்பங்களை தவிர்த்து இறை தன்மையை உணர வைக்கும் அற்புத நிலை. ராஜ அலங்காரத்தில் நிகழ்கால வாழ்க்கையை சீரும் சிறப்புமாக வாழ்ந்து, நலமாக வாழும் போதே, நம் வாழ்வின் நோக்கம் பிறவி தொடர் அறுந்து இறைவனோடு ஒன்றென கலப்பதே என உணர்த்துவது ஆண்டிகோலம். எனவே இரண்டு நிலைகளையும் உணர்த்தவே ராஜ அலங்காரம், ஆண்டிகோலம் என்று புரிதல் கொள்ளுதல் சிறப்பு. எனவே ஆண்டிகோலத்தில் முருகரை தரிசிப்பதும் ஓர் ஆனந்தமே " என்று நிறைவு செய்தார். என்ன ஒரு அற்புதமான சிந்தனை விளக்கம். எல்லோரும் மெய்மறந்தோம். ஓம் சரவணபவ .....❤️❤️❤️🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - Saravanan sk Saravanan sk - ShareChat