பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொன்ன அரசாங்கத்தின் ஆவல நிலை
காலம் முழுவதும் காரைக்கால் மக்கள் நல்ல சாலையில் பயணிக்க வழியே இல்லையா இல்லை வழி தான் கிடைக்குமா
காரைக்கால் மக்கள் போராட்ட குழு சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு இனி நடைபெறும் அனைத்து விபத்துகளிலும் சம்பந்தப்பட்ட அமைச்சர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கப்பட்ட பிறகு
காரைக்கால் அம்மாள் சத்திரம் மதகடியில் இருந்து மீண்டும் பஞ்சர் ஒட்டும் வேலையை பொதுப்பணித்துறை முகூர்த்தம் பார்த்து ஆரம்பித்திருக்கிறது இப்படி மாதா மாதம் பஞ்சர் ஒட்டுகிற செலவை ஒரு முறை தார் சாலையை போட்டு விடும் செலவு குறைவாகத்தான் இருக்கும் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் மிக அருமையான அற்புதமான அரசு
இந்த அவலங்களைஎதிர்த்து கேட்க துணிவு இல்லாத எதிர்கட்சிகள் காரைக்கால் மாவட்ட எம்எல்ஏக்கள் மற்றும் மந்திரி
மக்கள் பணத்தை இப்படி வீணடிக்கிறோமே என்ற கவலை கூட அளவே இல்லாத நல் அரசு அதிகாரிகள்
தற்போது பள்ளத்தை மூடுகின்ற வேலையை பொதுப்பணித்துறை ஆரம்பித்து இருக்கிறது இப்படி பஞ்ச ஒட்டுவாவது இனி நல்ல விதமாக பஞ்சர் ஒட்டுங்கள் என்பதுதான் மக்கள் எண்ணம் மழை பெய்தால் கரைந்து கொண்டு செல்லாமல் இனிமேலாவது நல்ல விதமாக இந்த பஞ்சரையாவது நன்றாக ஒட்டுங்கள் என்று பொதுப்பணித்துறைக்கு அன்பான வேண்டுகோளை வைப்பது விட வேறு வழியே இல்லை
முன்பு தமிழ்நாட்டை விட மிக சிறப்பாக இருந்த காரைக்கால் மாவட்ட சாலைகள் இன்று மிக கேவலமாக இருப்பதும் தமிழ்நாட்டில் உள்ள சாலைகள் அருமையாக இருப்பதும் ஆட்சியாளர் கையில்தான் உள்ளது
ரெஸ்டோபார் பிறப்பதற்கும் கேளிக்கை கூத்துக்கள் நடத்துவதற்கும் கவனம் செலுத்தும் இந்த மிக அருமையான அரசு மக்கள் நலனைக் கொண்டு செயல்பட்டால் நன்றாக இருக்கும் #செய்தி


