ShareChat
click to see wallet page
search
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 நான் மரணிக்கும் போது.. நான் இறக்கும் போது கலக்கமடைய மாட்டேன், என் தேய்ந்து போன உடலைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன். இக்கட்டுரையின் முடிவில் உள்ள வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள், அதனால் உலகத்தில் மயங்கி, மறுமையை மறந்து விடுகின்ற உள்ளம் பலவீனமாக இருக்கும் மக்களுக்கு இது ஒரு பாடமாகவும் படிப்பினையாகவும் இருக்கும். நான் இறந்தால் எனது முஸ்லிம் சகோதரர்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்வார்கள், அதாவது: 1- அவர்கள் என் ஆடைகளை களைவார்கள். 2- என்னை கழுவுவார்கள். 3 - எனக்கு கபன் செய்வார்கள். 4- என்னை என் வீட்டை விட்டு வெளியே கொண்டு செல்வார்கள். 5- அவர்கள் என்னை எனது புதிய வீட்டிற்கு (மண்ணறைக்கு) அழைத்துச் செல்வார்கள். 6- எனது இறுதி ஊர்வலத்திற்கு பலர் வருவார்கள். அவர்களில் பலர் என்னை அடக்கம் செய்ய தங்கள் தொழில்கள் மற்றும் நேரங்களை தியாகம் செய்து வருவார்கள். மேலும், அவர்களில் பலர் என் அறிவுரையை ஒரு நாள் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். 7- நான் பயன்படுத்திய எனது பொருட்கள் அப்புறப்படுத்தப்படும். எனது சாவிகள்... என் புத்தகங்கள் ... என் பைகள்... என் காலணிகள்... என் உடைகள் மற்றும் பல... அவை மீண்டும் பயன்படுத் நல்லதாக இருப்பின் எனக்கு நன்மை நாடி அவர்கள் அதை தர்மமாக கொடுப்பார்கள். உலகம் எனக்காக வருத்தப்படாது. உலகத்தில் எந்தவொரு இயக்கமும் எனக்காக நிற்க / நிறுத்தப்பட மாட்டாது. பொருளாதாரம் தொடரும். என் பணிகளை வேறு பணியாட்கள் தொடர்ந்து செய்வார்கள். மேலும் எனது சொத்துக்கள் என் வாரிசுகளுக்கு ஹலாலாக கிடைக்கும். ஆனால் அதனை திரட்டிய விதம் பற்றி மறுமையில் நான் விசாரிக்கப் படுபவனாக இருப்பேன்...! மேலும் நான் இறந்து விட்டால் முதலில் எண்ணில் இருந்து நீக்கப் படுவது என் பெயர்தான்...! நான் இறந்த பின்னர் அவர்கள் ஜனாஸா (பூத உடல்) எங்கே என்று தான் விசாரிப்பார்கள். எனது பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள்...! அவர்கள் எனக்காக தொழுகை நடாத்தும் போது, ஜனாஸாவைக் கொண்டுவாருங்கள் எனக் கூறுவார்கள். என்னை பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள்...! அவர்கள் என்னை அடக்கம் செய்யத் தொடங்கும் போது, ​​மையத்தை அருகில் கொண்டு வாருங்கள் எனச் சொல்வார்கள். அவர்கள் என் பெயரைக் குறிப்பிட மாட்டார்கள்! ஆதலால், என் பரம்பரையோ, என் கோத்திரமோ, என் பதவியோ, புகழோ எனக்கு பயனளிக்காது...! 🍁 இந்த உலகம் எவ்வளவு அற்பமானது, நாம் செல்லவிருக்கும் இடம் மிகவும் மகத்துவமானது...! 👉🏻 இப்போது வாழ்பவர்களே... உங்களுக்காக துக்கப்படுபவர்கள் மூன்று வகையினர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 1 - உங்களை மேலோட்டமாக அறிந்தவர்கள் : இவன் ஒரு அப்பாவி என்று சொல்வார்கள். 2 - உங்கள் நண்பர்கள், அவர்கள் துக்கப்படுவார்கள். சில மணிநேரங்கள் அல்லது சில நாட்கள், பின்னர் அவர்களின் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள்... ! 3- வீட்டில், ஆழ்ந்த சோகம் இருக்கும் உங்கள் குடும்பம் ஒரு வாரம், இரண்டு வாரங்களுக்கு வருத்தப்படும் அதே ஒரு மாதம்... இரண்டு மாதங்கள், அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம். பின்னர், உங்களை நினைவுக் காப்பகத்தில் வைப்பார்கள்...! மக்கள் மத்தியில் உங்கள் கதை முடிந்துவிட்டது, உங்கள் நிஜக் கதையும் தொடங்கிவிடும்... அதுதான் மறுமை வாழ்க்கை...! உன்னை விட்டும் உன்: 1 - அழகு... 2 - பணம்... 3 - ஆரோக்கியம்... 4 - குழந்தைகள்... 5- வீடுகளும் அரண்மனைகளும் 6- மற்றும் உன் துணைவரும் பிரிந்துவிடுவர்...! உன்னுடைய அமல்கள் மட்டுமே மிச்சம் இருக்க உண்மையான வாழ்க்கை தொடங்கிவிடும்! 🍃 இங்கேதான் கேள்வி உள்ளது: உங்கள் கப்ருக்காகவும், மறுமைக்காகவும் நீங்கள் என்ன தயார் செய்துள்ளீர்கள்?! இது சிந்திக்க வேண்டிய உண்மை... 👉🏻எனவே இவற்றில் கவனம் செலுத்துங்கள்: 1 - பர்ளானவை... 2 - ஸுன்னத்தானவை... 3- இரகசிய ஸதகாக்கள்... 4- நல்ல அமல்கள் ... 5- இரவுத் தொழுகைகள்... நீங்கள் வெற்றி பெறலாம். 🌾 நீங்கள் இப்போது உயிருடன் இருக்கும்போது இந்தக் கட்டுரை மூலம் மக்களுக்கு நினைவூட்ட உதவினால்; மறுமை நாளில் உங்கள் நினைவூட்டலின் தாக்கத்தை உங்கள் மீஸானில் காண்பீர்கள், இறைவன் நாடினால்... (وذكّر فإن الذكرى تنفعُ المؤمنين) (நினைவூட்டுங்கள், ஏனெனில் நினைவூட்டல் நம்பிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும்.) அத்தாரியாத் : 55 👉🏻 அல்லாஹ் கூறியது போல் மரணித்தவர்கள் ஏன் உலகிற்குத் திரும்பினால் ஸதகாவை (தர்மம்) தேர்ந்தெடுக்க வேண்டும்? ( رب لولا أخرتني إلى أجل قريب فأصدق) {இறைவா, நீ என்னை ஒரு குறுகிய காலத்திற்கு தாமதப்படுத்தினால், நான் தர்மம் செய்வேன்} அத்தியாயம் அல் முனாபிகூன்:10 அவரோ; உம்ரா செய்ய என்றோ, அல்லது தொழுவதற்கு என்றோ, அல்லது நோன்பு இருக்க வேண்டும் என்றோ கூறவில்லை. 👉🏻 இது பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் கூறியதாவது: இறந்தவர், தர்மங்களைப் பற்றி மட்டுமே கூறியுள்ளதன் காரணம் அவரது இறப்பின் பிறகு அதன் ஆழ்ந்த தாக்கத்தினைக் கண்டதனாலேயே ஆகும்... ! எனவே தான தர்மத்தை அதிகப்படுத்துங்கள்...! 🌹 இப்போது நீங்கள் செய்யக்கூடிய சிறந்த தர்மங்களில் ஒன்று, அறிவுரை வழங்கும் நோக்கத்துடன் இந்த கட்டுரையை பரப்புவதற்கு உங்கள் நேரத்தில் 10 வினாடிகளை செலவு செய்வதாகும். 💐 இதனை பரப்புவதற்கு அனுமதி கேட்காதீர்கள், தர்மங்களை அதிகப்படுத்துங்கள்!!! 👉🏻
💝இதயத்தின் துடிப்பு நீ - ಸತಕ್ತ கூறினார்கள் நபி Gबz இன்பங்களை தகர்த்தெரியக்கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள் திர்மிதி 246 நூல் ಸತಕ್ತ கூறினார்கள் நபி Gबz இன்பங்களை தகர்த்தெரியக்கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள் திர்மிதி 246 நூல் - ShareChat