ShareChat
click to see wallet page
search
🌿 *இன்றைய தேவ வார்த்தை* 🌿 📖 *தேவ வசனம்* *“கர்த்தரை எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்;* *அவரைத் துதிக்கும் துதி எப்பொழுதும் என் நாவில் இருக்கும்.”* — *சங்கீதம் 34:1* 🎙️ *செய்தி* தாவீது இந்த சங்கீதத்தை மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் எழுதினார். எதிரிகளால் துரத்தப்பட்ட காலத்திலும் கூட அவர் குறைகளைச் சொல்லவில்லை; அதற்குப் பதிலாக கர்த்தரை எப்போதும் ஸ்தோத்திரிக்க வேண்டும் என்று தீர்மானித்தார். இது நமக்கு ஒரு பெரிய பாடம். வாழ்க்கையில் சந்தோஷமான நேரங்களில் மட்டும் அல்ல, துன்பம், சோதனை, பயம், வியாதி, நெருக்கடி, இழப்புக்கள், ஏமாற்றம், காலதாமதம், அவமானம், நஷ்டம், ஒன்றும் இல்லாத நிலை, உதவியற்ற நிலை போன்ற சூழ்நிலைகளிலும் கர்த்தரைத் துதிக்க வேண்டும். ஏனெனில் ஸ்தோத்திரம் செய்வது நம் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது. நாம் கர்த்தரை எப்போதும் துதிக்கும்போது: நம் மனம் உற்சாகம் பெறும் தேவனின் சமாதானம் நம் உள்ளத்தில் நிறையும் தேவன் நம் வாழ்க்கையில் அதிசயமாக கிரியையாற்றுவார், நாம் நன்மையை பெற்று, வாழ்வை பெற்று, சுகத்தை பெற்று, விடுதலை பெற்று, அற்புதங்களை பெற்று, புதிய வழிகள் திறக்கப்பட்டு, பொருளாதார உயர்வுகளை பெற்று வாழ முடியும். ஆகையால் இன்று முதல் எந்த சூழ்நிலையிலும் *“கர்த்தரை எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்”* என்ற தாவீதின் மனப்பான்மையை நாம் எடுத்துக்கொள்வோம். 🙏 *கர்த்தரை துதிக்கும் நாவு ஒருபோதும் வெறுமையாக இருக்காது; அது ஆசீர்வாதத்தால் நிரம்பும்.* -- ✍️*சகோ சுதாகர் காட்வின்* 🔥*ஹெப்ரான் ஜெப ஊழியங்கள்* #சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
சகோ சுதாகர் காட்வின் - Toda s Gods WUord& Scripture 6I will bless the Lord at all times; His praise shall continually be in my mouth " Psalm 34:1 Message Praise the Lord in all situations: In times of suffering trials fear sickness disappointments  and loss, Keep praising God and Hewill work mightly inyour lifel Iwill bless the Lord at all times 9 the Lord] tonsue that praises will never remain empty; it will olwoys be filled with blessings Bro. Sudhakar Godwin Hebron Prayer Ministries Follow Us 0 Toda s Gods WUord& Scripture 6I will bless the Lord at all times; His praise shall continually be in my mouth " Psalm 34:1 Message Praise the Lord in all situations: In times of suffering trials fear sickness disappointments  and loss, Keep praising God and Hewill work mightly inyour lifel Iwill bless the Lord at all times 9 the Lord] tonsue that praises will never remain empty; it will olwoys be filled with blessings Bro. Sudhakar Godwin Hebron Prayer Ministries Follow Us 0 - ShareChat