ShareChat
click to see wallet page
search
இன்று சோதனைகளை நீக்கும் சோமவார பிரதோஷம் சிவன் கோவிலுக்கு சென்றால் இத்தனை நன்மைகளா.? 🕉️🙏_* *_🙏🕉️சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன._* *_மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது._* *_🙏மற்ற பிரதோஷ நாட்களைவிட சனிப்பிரதோஷம் மற்றும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு._* *🙏🕉️பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையானது. உலக மக்களைக் காக்க விஷத்தை குடித்து அதை கழுத்தில் தக்க வைத்துக்கொண்டவர் சிவபெருமான். அந்த நாள் திரயோதசி நாள் மாலை வேலையில் சிவன் மயக்கம் தெளிந்த நேரம் பிரதோஷம் வேளையாகும்.🕉️🙏* *🙏🕉️பிரதோஷ_விரதம்🕉️🙏* *🙏🕉️பிரதோஷம் நித்ய பிரதோஷம் ,மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.* *🙏விரதம் ஏற்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம்🪔 ஏற்றி வணங்க வேண்டும்.🙇‍♂️🤲🕉️🙏* *🙏🕉️சோமவார_பிரதோஷ_மகிமை🕉️🙏* *🙏🕉️சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நன்னாள்.* *சோமம் என்றால் சந்திரன். திங்கள் என்றாலும் சந்திரனைக் குறிக்கும்.* *சந்திரனை, பிறையாக்கி தன் சிரசிலேயே வைத்து அணிந்து கொண்டிருக்கிறார் சிவபெருமான்.* *சந்திரன் மனோகாரகன். நம் மனதில் குழப்பத்துக்கும் அவனே காரணம்.* *நாம் தெளிவாக இருப்பதற்கும் அவனே காரணம்.* *🙏ஆகவே, மனகிலேசத்துடன், மனக்குழப்பத்துடன், மனோபலமில்லாமல், மனத் தெளிவு இல்லாமல் துன்பப்படுபவர்கள் திங்கட்கிழமையில் சிவனாரை வழிபடுவது நன்மை.* *சோமவாரப்பிரதோசம் மனக்குழப்பத்தை தீர்க்கும்.🙇‍♂️🤲🕉️🙏* *🙏🕉️தோஷம்_நீக்கும்_சோமவார_பிரதோஷம்🕉️🙏* *🙏🕉️இன்று திங்கள் கிழமை திரயோதசி நாளில் நாம் சந்தனம் , பால் , இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து நாம் வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.* *ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் ,ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.* *தொழில் மேன்மை அடையும் ,கடன் பிரச்சனை தீரும்,திருமணம் தடை நீங்கும். போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும்.🙇‍♂️🤲🕉️🙏* *🙏🕉️சிவனுக்கு_அபிஷேம்*🕉️🙏 *🙏பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும்* *அபிஷேகப் பொருட்களை* *வாங்கிக்* *கொடுத்தால்* *எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.* *பாலபிஷேகம் செய்தால் நோய்கள் தீர்ந்து* *நீண்ட ஆயுள் கிடைக்கும்.* *தயிரபிஷேகத்தினால் வளங்கள் பல* *உண்டாகும்,* *தேனபிஷேகம் இனிய குரலும்,* *பழங்களால் அபிஷேகம்* *செய்தால் நிலத்தில்* *விளைச்சல்* *பெருகும்.* *பஞ்சாமிர்தம்* *அபிஷேகத்தினால் செல்வம் பெருகும்*🕉️🙏* *🙏🕉️சக்தி_தரும்_அபிஷேகம்*🕉️🙏 *🙏🕉️நந்திக்கு நெய் அபிஷேகம்* *செய்தால் முக்தி* *பேறு கிட்டும்.* *இளநீர் அபிஷேகம் செய்தால் நல்ல* *மக்கட் பேறு* *கிட்டும்.* *சர்க்கரை அபிஷேகத்தினால்* *எதிர்ப்புகள்* *மறையும்.* *எண்ணெய் அபிஷேகம்* *செய்தால் சுகவாழ்வு* *கிடைக்கும்.* *சந்தன அபிஷேகம் செய்வதன் மூலம்* *சிறப்பான சக்திகள் பெறலாம்,* *மலர்கள் அபிஷேகம்* *செய்வதனால் தெய்வ* *தரிசனம் கிட்டும்.🕉️🙏* *பக்தர்களுக்கு_பிரசாதம்* *பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன்,* *வறுமை, நோய் பயம் விலகும்.* *ஒரு கைப்பிடி காப்பரிசி,* *ஒரு பிடி வில்வ இலை, ஒரு பிடி அருகம் புல்* *ஆகியவற்றை சிவனுக்கு கொடுத்து* *🪔விளக்கேற்றி நந்தியையும் சிவனையும்* *வணங்க 🤲🙏சகல துன்பங்களும்* *விலகும் என்பது* *நம்பிக்கை. 🕉️🙏* *🙏🕉️சோமவார பிரதோச நாளில்* *எலுமிச்சை* *சாதமோ தயிர் சாதமோ,* *சர்க்கரைப் பொங்கலோ* *வெண்பொங்கலோ* *இறைவனுக்கு நைவேத்தியம் செய்து,* *பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள்* *நீங்கும்* *முன்னேற்றம் கிடைக்கும்.💐🌷🌹🤲👣🙇‍♂️🕉️🙏* *🙏🕉️ஓம் நமசிவாய ஓம் 🕉️🙏* *🙏🕉️திருச்சிற்றம்பலம் 🕉️🙏* #🙏ஆன்மீகம் #🙏கோவில் #✨பிரதோஷம்🕉️
🙏ஆன்மீகம் - ٧٥ ٧  பலசிராம்தம  ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன் வாட்சப் டெலிகிராம் குழுமம் 9677343536 இன்றுபிரதோஷம் ٧٥ ٧  பலசிராம்தம  ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன் வாட்சப் டெலிகிராம் குழுமம் 9677343536 இன்றுபிரதோஷம் - ShareChat