ShareChat
click to see wallet page
search
#📺அரசியல் 360🔴 #💪தி.மு.க நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் ₹1.40 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை மற்றும் 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன் திறந்து வைத்தார். கடலூர் மேற்கு மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில், ரூபாய் 1.40 கோடி மதிப்பீட்டில் 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் ஒரு பேருந்து நிழற்குடை ஆகியவை இன்று திறந்து வைக்கப்பட்டன.சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12 லட்சம் மதிப்பீட்டில்- பேருந்து நிழற்குடை, தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி: ₹40 லட்சம் மதிப்பிடிலும் PTR நகரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி: ₹44 லட்சம் மதிப்பிடிலும். அசோக் நகரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி: ₹44 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டி முடிக்கப்பட்டு இன்று. நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு. சபா. இராசேந்திரன் அவர்கள் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் பண்ருட்டி ஒன்றிய பெருந்தலைவர் சபா. பாலமுருகன், சபா. வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், அவைத்தலைவர் வீர ராமச்சந்திரன், ஆனந்த ஜோதி, ஏழுமலை, ராம வெங்கடேசன், கவிதா ஜனார்த்தனன், பிச்சையா, கலா கிருஷ்ணன், ஜெயசுந்தரி, சக்திவேல், குமரவேல், சங்கர் கோபால், வாஜித், அய்யனாரப்பன், பழனிவேல், ஸ்ரீதர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கோபு, இலங்கேஸ்வரன், இளங்கோ, சிவசங்கரன், சங்கர் ராஜாராம், ஜெயராமன், ராதாகிருஷ்ணன், பாலசுப்ரமணியன், கோவிந்தன், கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், நடராஜன், சந்திரமோகன், சிங்காரவேலன், ரவிக்குமார், வேணுகோபால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். இந்தத் திட்டங்கள் மக்களின் குடிநீர் தேவை மற்றும் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என சட்டமன்ற உறுப்பினர் திரு. சபா. இராசேந்திரன் தெரிவித்தார்.
📺அரசியல் 360🔴 - ShareChat