ShareChat
click to see wallet page
search
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில், @AIADMKOfficial இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் திரு. செந்தில், டீக்கடையைத் திறக்கச் சென்றபோது, அங்கு மது அருந்தியவர்களை தட்டி கேட்டபோது, போதை ஆசாமிகள் அவரை கொடூரமான முறையில் தாக்கி, தலையைத் துண்டித்து படுகொலை செய்துள்ள கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பல்லடத்தில், வீட்டின் முன் மது குடித்ததைத் தட்டிக் கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை, மயிலாடுதுறை மாவட்டத்தில், கள்ளச்சாராயம் விற்பதைத் தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை, கனிமவள கொள்ளையைத் தட்டிக் கேட்டால் படுகொலை என்றால் திமுக ஆட்சியில், தவறுகளைத் தட்டிக் கேட்பவர்களுக்கு மரணம் மட்டும்தான் பரிசா? பொம்மை முதல்வர் @mkstalin தலைமையிலான கேடுகெட்ட திமுக ஆட்சியில், கொடூர குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பயம் என்பதே இல்லை என்பது, தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு முற்றிலும் செத்துவிட்டது என்பதற்கான வெளிப்படையான சான்று. #DMKFailsTN #📺அரசியல் 360🔴 #AIADMK
📺அரசியல் 360🔴 - ShareChat
00:54