எனது கதையை நானே எழுதும் போதெல்லாம்
வரிகளுக்கு இடையில் மற்றொருவன்
அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறான்
____________________
முற்றத்தில் விழுந்த பூக்களை சேகரிக்கும்போது
காலம் உதிர்ந்து போன இடத்தையே
கைகள் துழாவுகின்றன.
மறக்கப்பட்ட பாடலின் மெட்டு
பாதியிலேயே நின்ற ஆட்டத்தின்
காலடித் தடங்களை மீண்டும்
உயிர் பெறச் செய்கிறது.
தொலைந்து போன விளையாட்டின்
விதிகளே இப்போது வாழ்வின் பெரும்
ரகசியங்களாக உருமாறி நிற்கின்றன.
யாரும் வராத பாதையில் பூத்திருக்கும் மலர்
ஒருகாலத்தில் நாம் பகிர்ந்துகொண்ட
புன்னகையைச் சுமந்திருக்கிறது.
முடிவற்ற மாலை நேரங்களில்
தேநீரின் ஆவிக்குள் ஒளிந்திருக்கும்
பிம்பங்கள் முந்தைய வாழ்வின் எச்சங்கள்.
பிறந்த ஊரின் பெயர் இப்போது
ஊரின் பெயராக மட்டுமே எஞ்சி நிற்கிறது
என்னுள் இருக்கும் அகதியோ
இன்னும் அலைகிறான்.
எனது பெயர் சொல்லிக் கூப்பிடும்
குரல்களில்
நானற்ற பல மனிதர்களின் சாயல் படிந்திருக்கிறது. ...
#Noah Lais
#Ever never music...🎼🎧🎹🎸🎤 @ Sarithasenthil #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #👩❤️👨Long Distance Relationship #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்


