#🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸
*மகா சிவராத்திரி* (15.02.2026)
*நான்கு கால பூஜைகள் மற்றும் பலன்கள்*
முதல் கால பூஜை (மாலை 6:00 9:00) : பிரம்ம தேவர் வழிபட்ட நேரம்
அபிஷேகம்: பால், பஞ்சகவ்யம் (பசுவின் பால், தயிர், நெய், கோமியம், சாணம் கலந்தது).
பூக்கள்: வில்வம் மற்றும் தாமரை மலர்கள்.
நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல், பழங்கள்
பலன்: நம்முடைய கடந்த கால பாவங்கள் நீங்கும்.
இரண்டாம் கால பூஜை (இரவு 9:00 12:00) : மகாவிஷ்ணு வழிபட்ட நேரம்
அபிஷேகம் : இளநீர், பஞ்சாமிர்தம்
பூக்கள்: துளசி மற்றும் வில்வம்
நைவேத்தியம்: பருப்பு பாயசம், கற்கண்டு சாதம்
பலன்: செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி மற்றும் ஐஸ்வர்யம் உண்டாகும்.
தெய்வீகம் ஆரூர் - 4 whatsapp குழு https://chat.whatsapp.com/JjvZv6K5T535Hwmh4zDsj3
தெய்வீகம் ஆரூர் whatsapp channel https://whatsapp.com/channel/0029VaueZkyG3R3nOq3C4e00
தெய்வீகம் ஆரூர் Facebook Page https://www.facebook.com/profile.php?id=61566143855632
மூன்றாம் கால பூஜை (நள்ளிரவு 12:00 3:00) : அம்பாள் வழிபட்ட நேரம் (லிங்கோத்பவ காலம்)
அபிஷேகம்: தேன் மற்றும் பழச்சாறுகள்
நைவேத்தியம் : எள் சாதம் அல்லது எள் பலகாரம்
பூக்கள்: மல்லிகை, தும்பை, தாழம்பூ (வருடத்தில் இந்த ஒரு நேரம் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ சூட்டப்படும்).
பலன்: தீய சக்திகள் அகலும், நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்.
நான்காம் கால பூஜை (அதிகாலை 3:00 6:00) : தேவர்கள், ரிஷிகள் வழிபட்ட நேரம்
அபிஷேகம் : கரும்புச்சாறு மற்றும் பன்னீர்
பூக்கள்: அல்லி, சாமந்தி, நந்தியாவட்டை
நைவேத்தியம்: சுத்தமான அன்னம் அதில் ஒரு சொட்டு நெய் விட வேண்டும்.
பலன்: காரியத் தடைகள் நீங்கும், முக்தி மற்றும் மன அமைதி கிடைக்கும்.


