#😍தொடர் விடுமுறை அறிவிப்பு🎊 #📺வைரல் தகவல்🤩 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் தொடர்ந்து மாணவர்களுக்கு 12 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 4-ந்தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 5-ந்தேதி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 10-ந்தேதி தேர்வுகள் தொடங்கிய நிலையில், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளும் வரும் 23-ந்தேதியுடன் முடிவடைகின்றன.


