பழைய பேப்பர்!
காந்தியவாதி அன்னா ஹசாரே ஊழலை ஒழிக்க வலுவான ஜன் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரி பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் டெல்லியில் 2011 ஆகஸ்ட்டில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அந்தப் போராட்டத்திற்கு விஜய் ஆதரவு தெரிவித்துக் கலந்து கொண்டார். ’’இந்த அறவழிப் போராட்டத்துக்கு என் மக்கள் இயக்கம் உறுதுணையாக இருக்கும்’’ என்றும் பேசினார்.
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் தூண்டுதலால் நடத்தப்பட்ட Plan B-தான் அன்னா ஹசாரேவின் போராட்டம். அன்னா ஹசாரேவின் போராட்டங்கள் பாஜகவின் அரசியல் வளர்ச்சிக்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு அது. அதனால்தான் 2014-ல் மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. மோடி பிரதமர் ஆனார். ஊழல் எதிர்ப்புச் சட்டமான லோக்பால் மோடி ஆட்சியில் செயல்படவே இல்லை. மோடி ஆட்சியில் ஒருவரும் தண்டிக்கப்படவே இல்லை.
ஊழலை ஒழிக்க அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட விஜய், ஊழல் செய்யாமல் நேர்மையாக நடந்து கொண்டாரா? என்றால் இல்லை. 2015-16 நிதியாண்டில் 'புலி' படத்திற்காகப் பெற்ற வருமானத்தில் சுமார் ₹15 கோடியை முறையாகக் கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை விஜய் மீது குற்றம் சாட்டியது. ரெய்டுகள் நடத்தப்பட்டன. 2012-ஆல் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி விஜய் வழக்கு தொடர்ந்தார். 2005-ல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பாக நுழைவு வரி செலுத்தவில்லை எனப் புகார் எழுந்தது.
காங்கிரஸின் மன்மோகன் சிங் ஆட்சிக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் பங்கெடுத்த... ஊழலை எதிர்த்த... விஜய்தான் இப்போது காங்கிரஸ் கூட்டணிக்காக ஆளாய் பறந்து கொண்டிருக்கிறார்.
#tvk #அரசியல் #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #🤭அரசியல் மீம்ஸ் #📺அரசியல் 360🔴


