பங்குனி வளர்பிறை சஷ்டி
அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்
மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
சககெனசேகு தகுதிமித்தோதி திமியென ஆடும் மயிலோனே
திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே.
பங்குனி மாதம் தெய்வங்களுக்கு விரதங்கள் இருப்பதும் வழிபாடு கள் செய்வதற்கும் ஒருசிறந்த மதமாக இருக்கிறது.எனவே இந்த பங்குனி மாதத்தில் வரு கின்ற சஷ்டி தினங்கள் மகத்து வம் மிக்கதாக கருதப்படுகின் றன. அதிலும் இன்றைய சஷ்டி தினம் செவ்வாய்க்கிழமை அன்று வருவது கூடுதல் சிறப்பாகும்..
பங்குனி மாத வளர்பிறை சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி,நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப் பெருமானை தியானித்து, அவரை வணங்க வேண்டும்.
இன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும்.
மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும்.
பின்பு வீடு திரும்பியதும் முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
நோய் நீங்கும்:
நீண்ட நாட்களாக தீராத நோய்கள் இந்த நாளில் விரதமிருந்தால் குணமாகும் என நம்பப்படுகிறது.
திருமண யோகம்:
திருமணத் தடைகளால் அவதிப்படுபவர்கள் முருகனை வழிபட, விரைவில் திருமண யோகம் கூடி வரும்.
குழந்தை பாக்கியம்:
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்தால் பலன் கிடைக்கும்.
வெற்றி:
எதிரிகளின் தொல்லை நீங்கி, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
இன்று இந்தப் பங்குனி வளர்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு நெடுநாட்களாக நீடித்து வந்த எத்தகைய பிரச்சனைகளும் தீரும்.
உங்களுக்கு இருந்து வந்த பொருளாதார கஷ்டங்கள் விரைவில் தீரும்.ஏழ்மை நிலை அறவே நீங்கும்
நன்றி
#🌻வாழ்த்துக்கள்💐
00:18

