ShareChat
click to see wallet page
search
#புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் பேரணி தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57ஆவது நினைவு நாளான இன்று புதுக்கோட்டையில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் இருந்து அமைதி பேரணியான கீழ ராஜ வீதியில் அண்ணா சிலைக்கு சென்று அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. கழக இலக்கிய அணி துணைத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன், புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் VR.கார்த்திக் தொண்டைமான், புதுக்கோட்டை மேயர் திலகவதி செந்தில் துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி, தெற்கு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ் உள்ளிட்ட மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பங்கேற்றனர். பேரறிஞர் அண்ணா ,முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நடைபோடும், நம் கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் தலைமையில், மீண்டும் கழக அரசை அமைத்திடவும் தமிழ்நாட்டை பாதுகாத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம். அண்ணாவின் புகழ் ஓங்குகட்டும்!
புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் பேரணி - பதக்கோடa திமுக TOLL [E பேர அண்ா உக்குமால  14545440261 பொறிஞர நண்டு Ihot Omnnin ICT பதக்கோடa திமுக TOLL [E பேர அண்ா உக்குமால  14545440261 பொறிஞர நண்டு Ihot Omnnin ICT - ShareChat