#உஷா❤️ முத்தமெல்லாம் எச்சில் என்ற
பொய்யான வீண் வாதங்களெல்லாம்
நீ உமிழ்ந்த அமுதநீரில்
கரைந்து தான் போனதடி !!
சத்தமாக வெட்கம் விட்டு கூட கூறுவேன்
இதயம் இமைக்காமல்
உன்னையே தான் தேடுதென்று
இம்சை படுத்தும் இரவல் இரவெல்லாம்
தொல்லை தான் நீயில்லாத
இருட்டு நரகத்தில்
வீசும் காற்றில் விஷமாய் போதையேற்றும்
உன் மல்லிகைப்பூ வாசனையை
தொலைத்த பின்
என் அறைகளில் எங்கே போய் தேடுவேன் ?
நல்ல பிள்ளை பேரெல்லாம் எனக்கு வேண்டாம்
முற்றும் துறக்கிறேன்
புத்தனாக அல்ல
புனிதனாக அல்ல
மனிதனாக
பிறந்த குழந்தையாய் உன்னை தழுவி
வாழும் நரகத்தை
சொர்க்கமாக்க உன்னை தேடுகிறேன்
எப்போது தான் வருவாய்
உறங்காமல்
கனவில் கூட உனக்காக காத்திருக்கிறேன்
அதீத ஆத்ம காதலோடு ❣️


