தனக்குப்தன் என்ற வணிகனின் மனைவி ரத்னாவதி கருவுற்றிருந்தால் தனது பிரசவத்திற்காக தாயின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள் ஆனால் காவேரியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கினால் ரத்னாவதியின் தாயார் ஆற்றை கடந்து வர முடியவில்லை
தனிமையில் பிரசவ வலியால் துடித்த ரத்னாவதி ஈசனிடம் முறையிட்டார் பக்தியின் துயர்துடைக்க ஈசன் ரத்னாவதியின் தாய் வடிவிலேயே நேரில் தோன்றி அவளுக்கு பிரசவம் பார்த்து ஒரு வாரம் வரை உடனிருந்து கவனித்துக் கொண்டால் வெள்ளம் வடிந்த பிறகு நிஜத்தாய் வர அங்கு இரண்டு தாய்கள் இருப்பதைக் கண்டு ஏற்பாடு செய்தனர் அப்போது சிவன் தனது சுய ரூபத்தை காட்டி அருள்புரிந்தார் தாயும் ஆனவர் என்பதால் தாயுமானவர் என்ற பெயர் ஏற்பட்டது
இத்தலம் மகப்பேறு மற்றும் சுகப்பிரசவத்திற்கு மிகவும் விசேஷமானது கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் அம்பிகைக்கு தலா 21 கொழுக்கட்டைகள் 21 அப்பம் படைத்து ஒரு துணியில் மஞ்சள் குங்குமம் வெற்றிலை கட்டி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர் இதனால் சுகப்பிரசவம் அமையும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை
சித்திரை மாதம் பிரம்மோற்சவத்தில் ஐந்தாம் நாளில் ரத்னாவதிக்கு சிவன் பிரசவம் கோலங்கலமாக நடக்கும் அன்று பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்து தைலமே பிரசாதமாக வழங்கப்படுகிறது இதனை அருந்தும் பெண்களுக்கு பிரசவம் எளிதாகும் என்பது ஐதீகம்
மட்டுவார் குழலிஎன்பதற்கு வாசனை உடைய கூந்தலை உடையவள் என்று பொருள் இத்தலத்தில் அம்மனுக்கு தனி சன்னதி உண்டு
திருச்சி மலைக்கோட்டை சென்று தாயாக வந்து அருளும் கொய்யாபரணி தரிசித்து எல்லா பலன்களையும் ஈசன் அருளால் அடையலாம் #🙏ஆன்மீகம்


