
நிலவொளி விழுந்த ஒரு இரவில், வானத்தில் அமைதியாக பறந்துகொண்டிருந்தது ஒரு கழுகு… அப்போது, ஒரு பாறையின் அருகே, குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த ஃபீனிக்ஸை அது கண்டது… தீ அணைந்து, எழ முடியாமல் தவித்த அந்த ஃபீனிக்ஸை, கழுகு தனியாக விடவில்லை… தன் பெரிய இறக்கைகளால், காற்றைத் தடுத்து, அருகில் அமர்ந்து பாதுகாப்பளித்தது… அந்த பரிவின் வெப்பத்தில், ஃபீனிக்ஸின் உள்ளே ஒரு சிறிய தீப்பொறி மீண்டும் ஒளிர்ந்தது… சூரியன் உதிக்கும் முன், அது மீண்டும் பறக்கத் தயாரானது… பறக்கும் முன், ஃபீனிக்ஸ் மெதுவாகச் சொன்னது… “நீ கொடுத்தது தீ இல்லை… நம்பிக்கை.” _ _ _ பரிவு… சில நேரங்களில் உயிரையே மீண்டும் எழுப்பும் | Vinithkumar

