ShareChat
click to see wallet page
search
மேள சத்தம் ஒலிக்க... வேட்டுச் சத்தம் அதிர... கொடி ஏற்றத்துடன்... தொடங்குதம்மா ஈஸ்வரியின் திருவிழா! வம்சம் தழைக்கவே... வந்து அமர்ந்த அரசியே! குலம் காக்க... குடி கொண்ட ஈஸ்வரியே! அன்னை அருளாலே... அகிலம் தழைக்குதம்மா! மனம் உருகி வேண்டினால்... மகத்தான வாழ்வு தருபவளே ஈஸ்வரியே! செப்புத்திருமேனி அம்மா... செஞ்சு வச்ச தேரழகு மா! கதிரவன் உதிக்கும் முன்னே... வீதி வலம் வரும் ஈஸ்வரியே! யான் அறியாத போதே... எனை ஆட்கொண்டாயே அம்மா! மேனி சிலிர்க்க... என் முன்னோர் உடலில் குடி கொண்டாய் அம்மா! ஓலைக் குடிசையிலே அன்று... அருள்வாக்குச் சொன்னவளே! ஓட்டுக் கூரையிலே அமர்ந்து... ஆட்சி செய்தவளே! ​ ஈஸ்வரி ஈஸ்வரி என்று துதித்தாலே... சிவஞானமும் உண்டாகும் அம்மா! ஈஸ்வரி ஈஸ்வரி என்று துதித்தாலே... சிவஞானமும் உண்டாகும் அம்மா! ​ கல் மண்டபம் எனும் கருவறையில்... இன்று நிலைத்தவளே! மண்ணால் செய்த தேகம் அன்று... சிற்பத்தில் உயிர் கொண்டு ஒளி தந்தாய் அம்மா இன்று! அய்யா கோவில் சப்பரம் முன்னே வர... அன்னை காளியின் சப்பரம் பின்னே வர... மூன்றாவதாய் உன் சப்பரம் வீதியுலா வரும் என... நீ தந்த வாக்கு இன்று... சத்தியமாய் பலிக்குதம்மா! ​ சொந்தம் பந்தம் ஆயிரம் இருக்க... நான் உன்னை மட்டும் நாடி வந்தேன் அம்மா! உன் பொற்பாதத்தில் தஞ்சம் கொண்டேன்... என் அம்மா! பேராசை ஏதும் இல்லை அம்மா... உன் பெயர் சொல்லி வாழ்ந்தாலே போதும் அம்மா! ​ காப்பாய் அம்மா... காலமெல்லாம் காப்பாய் அம்மா! ஈஸ்வரியே... சரணம் அம்மா! ஈஸ்வரியே... சரணம் அம்மா செல்வா ✍️ #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #ஆன்மீகம் #மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஓம் சக்தி #செல்வா கவிதை