🌿 *இன்றைய தேவ வார்த்தை* 🌿
📖 *தேவ வசனம்*
*“இஸ்ரவேல் மக்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடமைகளையும், பொன்னுடமைகளையும், வஸ்திரங்களையும் கேட்டார்கள்; கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியருடைய கண்களில் கிருபை உண்டாக்கினார்; அவர்கள் கேட்டதை அவர்கள் கொடுத்தார்கள்.”*
— *யாத்திராகமம் 12:35-36*
🎙️ *செய்தி*
இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைத்தனத்தில் பல ஆண்டுகள் துன்பப்பட்டார்கள். ஆனால் அவர்கள் புறப்பட வேண்டிய நேரம் வந்தபோது, தேவன் அவர்களுக்கு வெறும் விடுதலையை அல்ல, நிறைவான ஆசீர்வாதத்தையும் கொடுத்தார்.
அவர்கள் காலியான கைகளோடு புறப்படவில்லை;
வெள்ளியும் பொன்னும் உடன் புறப்பட்டார்கள். அதுவரை உழைத்தார்கள் ஊதியம் இல்லை, உயர்வு இல்லை,'நன்மைகள் இல்லை, பாதுகாப்பு இல்லை, நீதியும், நியாயமும் மறுக்கப்பட்டது, அவர்களது ஆசீர்வாதங்கள் பறிக்கப்பட்டது, வாய்ப்புகள் பறிபோனது, பழி சொற்களும், ஏமாற்றமும், அடிகளும், வலிகளும், ஏமாற்றமும், விரகத்தியும், இயலாமையும் அங்கீகாரம் இல்லாத நிலை மட்டுமே நிலவியது ஆனால் தேவன் பலத்த வல்லமையை வெளிபடுத்தி அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, உழைப்பின் பலனை கொடுத்து, நீதியின் செயலை வெளிப்படுத்தினார்
இதில் ஒரு ஆழமான ஆன்மீக உண்மை இருக்கிறது:
👉 தேவன் தம் ஜனங்களை வெறுமையோடு அனுப்புவதில்லை.
👉 நீண்ட கால கண்ணீருக்கும் உழைப்புக்கும் அவர் நீதியான பலன் தருகிறார்.
👉 எதிரிகள் கூட தேவனுடைய திட்டத்தில் ஆசீர்வாதத்தின் கருவிகளாக மாறுவார்கள்.
நீங்கள் இன்று எதிர்பார்த்திருக்கும் விடுதலை, முன்னேற்றம், பொருளாதார உயர்வு, சுகம், வாய்ப்புகள் — இவை எல்லாம் தேவன் நிர்ணயித்த நேரத்தில் ( இன்றே ) உங்களுக்குக் கிடைக்கும்.
அடிமைத்தனத்தின் நாட்கள் முடியும்.
கிருபையின் நாட்கள் தொடங்கும்.
காலியான வாழ்க்கை நிறைவான சாட்சியாக மாறும்.
இன்று தேவன் உங்களை நினைக்கிறார்.
நீங்கள் கேட்டதற்கும் மேலாக அவர் அளிக்க வல்லவர்!
🙏 *ஜெபம்*
கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் மறுபடியும் எழுச்சியை ஏற்படுத்தி,
வெறுமையை வளமாக மாற்றுவாராக!
— ✍️*சகோ சுதாகர் காட்வின்*
🔥*ஹெப்ரான் ஜெப ஊழியங்கள்*
#சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏


