சங்க அமைப்பு தினம்
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் போளூர் வட்டக் கிளையில் சங்க கட்டிடத்தில் இன்று காலை 10:30 மணியளவில் வட்ட தலைவர் க.அபிபுல்லாகான் தலைமையில் சங்க அமைப்பு தினம் நடைபெற்றது. வட்டத் தலைவர் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். வட்ட செயலாளர் சங்க நிகழ்வுகளை விளக்கிப் பேசினார். அதன் பின்னர் வட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 10 .2.26 மாவட்ட தலைநகர் ஆர்ப்பாட்டம் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. வட்ட செயலாளர் கடந்த கால நினைவுகளை விளக்கி கூறினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கூட்டத்தில் சந்திரசேகர் மணி மோகன் உதயசூரியன் ஏழுமலை மோகனம் ராஜாராமன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட்


