*🎈🎈🎈🎈மகளிர் உரிமைத்தொகை 5000 வைப்பு நிதியாக வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து, நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்*
*📕📙📗மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி பயனாளிகளுக்கு இன்று ரூ.5,000 தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளார். இதில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை முன்பணமாக ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 ஆக மொத்தம் ரூ.5,000 ஆகும். மேலும், திமுக மீண்டும் ஆட்சி அமைந்த உடன் மகளிர் உரிமைத் தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்குவோம் என வாக்குறுதி அளித்துள்ளார்*
*🖋️✏️🖍️இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நெய்வேலி ஆர்ச் கேட் அருகே சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்*
*🩷💛💙💜நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், அவர்களுடன் கழக நிர்வாகிகள் கழக துணைஅமைப்பு நிர்வாகிகள் கழக மகளிர் நிர்வாகிகள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்*
*✝️🌈நன்றிகளுடன் S S B.ராஜேஷ்குமார்* #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க


