ShareChat
click to see wallet page
search
#பக்தி ஆன்மீகம் மனிதனுக்கு கிடைக்க வேண்டிய பெரிய பாக்கியம் நல்ல குரு, எனக்கு அப்படி ஒரு மகத்துவமான குரு கிடைத்தார், உலகின் மிகசிறந்த ஆத்மா என அவரை என்னால் சொல்லமுடியும் நான் பேசுவதெல்லாம் என் சிந்தனையெல்லாம் என்னுடையவை அல்ல, அவர் போதித்த மாபெரும் சிந்தனையின் ஒரு துளியினைத்தான் உங்களிடம் பகிர்ந்துகொள்கின்றேன் என்றால் அவரின் மகத்துவம் எப்படியானது என்பதை புரிந்துகொள்ளலாம் வேதாந்த தத்துவங்களைப பிரபஞ்ச ரகசியங்களை அவர்போல் புரிந்த ஒரு மகானை, அவரை போல் எளிதாக விளக்கியவரை நான் அறிந்தவரை யாருமில்லை நான் நிழல் அவரே நிஜம் அந்த ஞானமலரின் தேன் குவியலில் இருந்துதான் சில துளி தேனை உங்களுக்கெல்லாம் தருகின்றேன், அம்மாதிரி மாபெரும் ஞானிகள் பல்லாயிரம் ஆண்டுக்கு ஒருமுறைதான் தோன்றுவார்கள்" தன் குரு ஞாதர் பற்றி சுவாமி விவேகானந்தர்... **குரு என்பதை விட பன்மடங்கு ஆற்றல் பெற்றவர்கள் சற்குருமார்கள்** அவர்களது கருணையின்றி ஒருவரும் முக்தி பெற முடியாது. நமது சற்குருவின் மூன்று நாட்கள் நடைபெறும் குரு பூஜை திருவிழாவில் அனைவரும் பங்கு கொண்டு பகவானின் பூரண அருளை பெற்று செல்வோம்.
பக்தி ஆன்மீகம் - ShareChat