ShareChat
click to see wallet page
search
பழைய பேப்பர்! சிவராஜ் பாட்டீல் - ஜெயலலிதா உரையாடலும் டேப் விவகாரமும்! முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மறைந்துவிட்டார். ஜெயலலிதா இருந்திருந்தால் அவருக்கு இரங்கல் தெரிவித்திருக்க மாட்டார். காரணம் பழைய பகை. 2004-ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது ஆளுநராக இருந்த ராம் மோகன் ராவை மாற்றிவிட்டு பர்னாலாவை நியமித்தது அன்றைக்கு இருந்த மன்மோகன் சிங் அரசு. அதில் உள் துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் ஆளுநர் மாற்றம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசினார். அப்போது நடந்த தொலைப்பேசி உரையாடலை ஜெயலலிதா டேப் செய்துவிட்டார் எனச் சர்ச்சை எழுந்தது. கவர்னர் ராம் மோகன் ராவை மாற்றத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா அரசு வழக்கு போட்டது. அந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கும் சிவராஜ் பாட்டீலுக்கும் இடையே நடந்த தொலைப்பேசி உரையாடலை அப்படியே தமிழக அரசின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் விளக்கமாக எடுத்து வைத்து வாதிட்டார். கவர்னரை இடமாற்றம் செய்யப் போவதாக பாட்டீல் சொன்னார். அதற்கு ஜெயலலிதா, இதுபற்றி என்னுடன் ஆலோசிக்க போன் செய்தீர்களா? தகவல் சொல்ல போன் செய்தீர்களா? என்று கேட்டார். பாட்டீல், சும்மா தகவல் தருவதற்குத்தான் தொடர்பு கொண்டேன் என்றார். ராம் மோகன் ராவை மாற்றப் பல காரணங்கள் உள்ளன. ஆந்திர ஆளுநர் பர்னாலா சரியான சாய்ஸ் என பாட்டீல் சொல்ல, ஜெயலலிதாவோ, ஐ யம் ஸாரி.. பர்னாலா என் தேர்வு இல்லை என்றார். இந்த நீண்ட உரையாடல் அரசியலில் பூகம்பத்தைக் கிளப்பியது. உடனே ஜெயலலிதா, சிவராஜ் பாட்டீலுடனான தொலைப்பேசி உரையாடலை டேப்பில் பதிவுசெய்யவில்லை. மற்றவர்களுடன் பேசும்போது அவர்கள் கூறியதையும், முன்பு படித்ததையும், பிறரது பேச்சையும் மீண்டும் அப்படியே நினைவுகூரும் நெப்போலியனைப் போன்ற மிகச் சிறந்த நினைவாற்றல் தனக்கு உண்டு என சொன்னார். #அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #📺அரசியல் 360🔴
அரசியல் - ShareChat