என் குவளையில் அவ்வளவு
காதல் நிரம்பியிருந்தது..
சுடச் சுட பருகிக் கொண்டிருந்தேன் திகட்டவேயில்லை ..
ஒரு மிடறு எஞ்சியிருந்த வேளை
சந்தேகம் என்னும் ஈ எங்கிருந்தோ
வந்து என் குவளைக்குள் விழுந்தது..
பல போராட்டங்களுக்கு மத்தியில்
அதை கலைத்து விடலாம் எனக்
நம்பிக் கொண்டிருந்த சமயத்தில் அது
தன்னை விடுவித்துக் கொள்ளாதவாறு பற்றிக் கொண்டது..
அன்பால் நிரம்பி வழிந்த காதல் குவளை பின்னர் கோபம், வெறுப்பு ,
சண்டை என மாறிக் கொண்டது ..
காலப்போக்கில் என் காதல்
குவளையை அப்படியே கொட்டவேண்டியாதாகிற்று..
இப்போது காதலின் சுவை மட்டும் என் மனதில் எஞ்சியிருக்கிறது ஆக
அடிக்கடி நினைத்துப் பார்ப்பதோடு
என் காதல் சரி ... #யார் எப்படியோ நான் அப்படித்தான்
00:10

