ஒரு மரம்
இன்னொரு
மரத்தின் நிர்வாணத்தின்
மீது ஆசை கொள்வதில்லை
ஏதாவது ஒரு பறவை
இன்னொரு பறவையின்
நிர்வாணத்தினை ரசித்ததாக
நீங்கள் என்றேனும்
கேள்வி பட்டதுண்டா ..?
விலங்குகளின்
நிர்வாணத்தினை
எந்த விலங்காவது மறைந்திருந்து
பார்த்து திருப்தி அடைந்ததாக
நீங்கள் கவனித்ததுண்டா
ஒரு நதி
இன்னொரு நதியின்
நிர்வாணத்தினை
எந்த வகையிலும்
ரசித்ததில்லை
ஆடைகளற்று சுழலும் இந்த பூமியை
முத்தமிடும் மழைத்துளிகள் அணிந்திருக்கும் உடைகளைபற்றி
உங்களுக்கேதாவது தெரியுமா ..?
எந்த சிற்பியாவது
ஆடைகட்டிய தெய்வ சிலைகளை
வடிவமைத்து வைத்ததுண்டா ..?
நிர்வாணமென்பது ஆபாசமா ..?
ஆதி தோற்றம் கொண்ட
இரு உயிர்கள் அணிந்திருந்த
முதல் ஆடை அது
அவர்களை படைத்திருந்தவனின்
தேகம் போர்த்தி கிடந்த
உடையெது ..?
அரவம் போதித்து
கனியை கடித்திடும்
முன்புவரை அவர்களின் நிர்வாணம்
அழகெனவே இருந்தது
இலை தழைகளை வைத்து
உறுப்புகளை மறைக்க தொடங்கிய
நாளிலிருந்து தான் நிர்வாணம்
மெல்ல மாறத்தொடங்கி
ஆபாசமென்றானது
இந்த மனிதர்களை போலல்ல
பறவைகளோ
விலங்குகளோ
தங்களின் நிர்வாணத்தினை
பெரிதும் பொருட்படுத்தி கொள்வதில்லை ஒருபோதும்
ஆபாசமென்று நினைத்து
கொண்டதுமில்லை
இந்த மனிதர்களை போலல்ல
பறவைகளோ
விலங்குகளோ தங்களின்
காமத்திற்காகவோ
சபலத்திற்காகவோ
நிர்வாணத்தினை
ரசித்து கொள்வதுமில்லை
உனக்கும் தெரியும் தானே
இந்நாள் வரை உயிர்களை உயிர்களுக்குள் படைப்பவன்
நிர்வாணத்தினை உடைகளால் போர்த்தி படைத்ததில்லையென்று ...!
ரசித்தது என் பெரும் காதல் பயன், அதில் காமத்திற்கு ஏது இடம்???🫰🏻♥️🫶🏻❤️🔥💯💝🪽 #😘 🄵ε📧ɭ m̸yʟøṽε 😍 #feel my love


