ShareChat
click to see wallet page
search
தென்காசி மாவட்டம் பூலாங்குளம் கிராமத்தில் வசிக்கும் சுடர்ஒளிவு பேச்சிகனி என்ற தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் அதில் மூத்த மகன் *சிவசுப்பிரமணியன்* என்ற (சரவணன்) இவன் பள்ளி படிக்கும் காலங்களில் மிக குரும்புதனம் சேட்டைகள் அதிகம் செய்பவன் இவன் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை திரு சுந்தரவேல் நடு நிலைப்பள்ளியில் படித்தான் அதன் பிறகு ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு வைகுண்டனூர் (மாதபட்டணம்) ச ச வி மேல்நிலைப் பள்ளியில் படித்தான் அதற்கு பிறகு குறும்பூர் விடுதியில் தங்கி பதினொன்றாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு படித்தான் படிக்கும் பொழுது சேட்டைகள் அதிகம் செய்பவன் லீவு நாள்களில் ஊருக்கு வந்தா மீண்டும் பள்ளி செல்ல அடம் பிடிப்பான் இவனது தந்தை இவனை சமாதானப்படுத்தி பள்ளியில் கொண்டு விட்டு வீடு திரும்புவார் ஆனால் இவன் அவருக்கு முன்னால் ஊருக்கு வந்து விடுவான் அவ்வளவு சேட்டை செய்பவன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு எம் எஸ் பி வி பாலிடெக்னிக் படித்தான் மிகவும் கண்டிப்பான பாலிடெக்னிக் இந்தப் பாலிடெக்னிக் என்று ஒரு ரூல்ஸ் உண்டு பிறர் யாரும் எளிதில் உள்ளே சென்று விட முடியாது இவன் பாலிடெக்னிக் படிக்கும் போது இவன் சேட்டைகள் குறையவே இல்லை நிறைய முறை விடுப்பு எடுத்து விடுவான் அப்படி ஒரு முறை விடுப்பு எடுக்கும் பொழுது வீட்டில் இருந்து தனது தந்தையை அழைத்து வாருமாறு கூறினார்கள் ஆனால் இவன் தந்தையே அழைத்துச் செல்வதற்கு பதிலாக இவனது அத்தானை அழைத்து சென்றான் ஆனால் அங்கு கட்டுப்பாடு அதிகம் உள்ள காரணத்தினால் இவனது தந்தையை வர வேண்டும் என்று கூறி விட்டார்கள் பின்பு ஊருக்கு வந்து மறுநாள் இவனது தந்தையை அழைத்துச் சென்றான் உங்கள் மகன் ரொம்ப சேட்டை செய்கிறான் இதே மாதிரி செய்து கொண்டிருந்தால் டிசியை கொடுத்து வெளியிலே அனுப்பி விடுவோம் என்று எச்சரித்தார்கள் இவன் டிப்ளமோ முடித்தவுடன் ஐதராபாத் ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தான் இவன் இறுக்கம் இடத்திலிருந்து வேலைக்கு சிறிது தூரம் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் தினமும் பேருந்தில் தான் தான் பயணம் செய்துதான் வேலையை செய்து வந்தான் ஒரு நாள் இவன் பேருந்து நிலையத்திற்கு காத்திருந்தான் வெகு நேரம் ஆகியும் பேருந்து வராத காரணத்தினால் வேலைக்கு தாமதம் ஆவதால் தாமதமாக வந்தான் அந்த அந்த வழியாக செல்லும் ஆட்டோவில் பயணம் செய்தான் அந்த ஆட்டோவில் ஆட்கள் அதிகம் இருந்ததால் இவன் ஆட்டோவில் ஒரு ஓரமாக இருந்தான் வண்டிப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் ஆட்டோவில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தான் இவன் கீழே விழுந்ததில் இவனது வலதுகையில் பலத்த காயம் ஏற்பட்டது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒரு மதம் தனது ஊரில் இருந்தான் பின்பு அந்த நிறுவனத்திலிருந்து வேலைக்கு அழைப்பு வந்தது ஆனால் இவன் அந்த நிறுவனத்தில் வேலை செய்ய விரும்ப விருப்பமில்லாத காரணத்தினால் அங்கு வேலைக்கு போகவில்லை ஆனால் அந்த நிறுவனம் வேலையில் சேர இவன் மூன்று ஆண்டு அக்ரிமெண்ட் செய்திருந்தான் ஆனால் இவன் வேலை பார்த்த காலம் ஒரு வருடம் மட்டுமே இதனால் அந்த நிறுவனம் இவனது சான்றிதழ் இவனிடம் கொடுக்கவில்லை அந்த சான்றிதழ் கேட்டு ஐதராபாத்தில் சென்றான் உங்கள் சான்றிதழ் வேண்டுமென்றால் ஒரு மாதம் சம்பளத்தை கொடுத்துவிட்டு உங்கள் சான்றிதழை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அந்த நிறுவனம் கூறியது பின்பு இவன் ஒரு மாதம் வருமானத்தை கொடுத்துவிட்டு அந்த நிறுவனத்திலிருந்து தனது சான்றிதழை பெற்றுக் கொண்டான் ஹைதராபாத் இருந்து வந்தவுடன் எந்த வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தேன் இவன் வீட்டிலே இருப்பதை அறிந்து இவனது தந்தை ஏதாவது வேலை செய்யாமல் இருக்க என்று சொல்லிக் கொண்டே இருப்பார் இவனுக்கும் சும்மா இருக்க மனம் இல்லாமல் சுரண்டை அருகே ஒரு பால் பண்ணையில் வேலையில் சேர்ந்தான் காலை சென்று விட்டு மாலை வீடு வந்து விடுவான் ஆனால் அந்த கம்பெனியில் ஒரு மாத காலம் மட்டுமே வேலை பார்த்தான் இவனுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்றால் சிலம்பம் கபடி இவன் சிலம்பம் மிக சிறப்பாக விளையாடுவான் ஒரு முறை இவனும் இவனது அத்தானும் ரவண சமுத்திரம் பக்ரீத் பண்டிகைக்கு கால்நாட்டு விழாவில் சிலம்பம் விளையாடுவதற்காக தனது ஊரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் சைக்கிள்லே இருவரும் சென்றார்கள் அவ்வளவு ஆர்வம் இவனுக்கு சிலம்பம் விளையாடுவதில் அதன் பிறகு திருவனந்தபுரம் ஹச் எம் டி என்ற ஒரு ஐடி கம்பெனியில் வேலையில் சேர்ந்தான் அங்கு மிகச் சிறப்பாக வேலையை செய்து வந்தான் இவன் வேலை செய்த நிறுவனர் இவனுக்கு சொந்தம் என்பதால் அவரது குடும்பத்தில் ஒருவனாக இருந்தான் அவர்கள் எங்கு சுற்றுலா சென்றாலும் இவனையும் அழைத்து சென்று விடுவார்கள் இந்த நிறுவனம் தனது இரண்டாவது கிளையை பூலாங்குளத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடைக்கல பட்டினம் ஹெச் எம் டி என்ற ஐடி நிறுவனத்தை தொடங்கினார்கள் அந்த நிறுவனத்தில் இவன் மேனேஜராக பொறுப்பு ஏற்றான் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வான் இவன் கீழ் 50 பேர் வேலை செய்தார்கள் எல்லாரிடமும் மிக ஜாலியாக பழகுவான் வேலை என்று வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வான் மற்ற நேரங்களில் அங்கு வேலை செய்பவர்களும் இங்கு ஜாலியாக பேசுவான் இவன் இந்த கம்பெனியில் இரண்டு ஆண்டுகள் வேலை செய்தான் பின்பு இவனை பணி மாற்றம் செய்து திருவனந்தபுரத்தில் இவன் முதல் வேலை பார்த்த அதே நிறுவனத்தில் பணி மாற்றம் செய்யப்பட்டான் அங்கு தன் வேலையை செய்து வந்தான் தன் ஊரில் அருகில் வேலை செய்து பழகிக் கொண்டவன் இவன் இவனால் நீண்ட காலம் அங்கு வேலை செய்ய மனமில்லை அந்த நிறுவனத்தில் ஒரு மாதம் மட்டுமே வேலை செய்தான் பின்பு வேலையின் பழுது அதிகம் உள்ள காரணத்தினால் அந்த நிறுவனத்தில் இருந்து வேலையில் இருந்து நின்று விட்டான் பின்பு இவன் ஒரு வேலையை தேடிக் கொண்டிருந்த நேரத்தில் இவனது நண்பன் மூலம் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை இருப்பதாக தெரிந்து கொண்டான் அந்த நிறுவனத்தில் நடத்திய நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு அந்த நிறுவனத்தில் இவனுக்கு வேலை கிடைத்தது செங்கோட்டை கிளையில் இவன் கலெக்சன் பாயாக வேலையில் சேர்ந்தான் தினமும் தனது ஊரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வருவான் இவனுக்கு கிடைத்த வேலையை மிக ஆர்வமுடன் செய்து வந்தான் இவனுக்கு கொடுத்த டார்கெட்டை கரெக்டா முடித்து விடுவான் மாத கடைசியில் பணம் செலுத்தாத நபர்களை தேடி பணம் வசூல் செய்ய வேண்டும் அப்படி வசூல் செய்யும் போது இவன் வாடிக்கையாளர் ஒருவர் இவனிடம் பிரச்சனையில் ஈடுபட்டார் அந்த பிரச்சனை சரி செய்ய தன் மேனேஜருக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்தான் இவன் மேனேஜர் நான் வாரேன் வாரேன் என்று சொல்லி வெகு நேரம்ஆகியும் வரவில்லை இவன் எதிர்பார்த்து காத்திருந்தான் பின்பு அங்கிருந்து கிளம்பினான் தனது அலுவலகத்திற்கு வந்தான் தனது மேனேஜரிடம் நடந்ததை கூறினான் ஆனால் இவன் மேனேஜர் அதெல்லாம் எனக்கு தெரியாது நீ தான் பணம் வசூல் பண்ணி வர வேண்டும் என்று சொன்னார் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது அந்த மாத கடைசியில் இவன் பார்த்துக் கொண்டிருந்த வேலை இருந்து வெளிவந்தான் இதற்குப் பிறகு கோயம்புத்தூரில் நேர்முக தேர்வில் கலந்து கொண்டு நெட்டபிம் இரிகேசன் என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான் அந்த நிறுவனத்தில் உள்ள சொட்டுநீர் பாசனம் பாசனம் மற்றும் தானியங்கி சொட்டுநீர் பாசனம் தரிசு நிலங்களுக்கு தென்னை மரங்களுக்கு எலுமிச்சை தோட்டம் என்று சொட்டு நீர் அமைக்கும் வேலையே செய்து வருகிறான் இதே வேலையை பார்த்துக்கொண்டு தான் நான் புதிதாக சொந்த தொழில் ஒன்று தொடங்க வேண்டும் என்று யோசித்தான் மனைவி ஊரான ஐந்தான்கட்டளை யில் ஒரு வாடகை கடையில் பால்பண்ணை ஒன்றை ஆரம்பித்தான் முதலில் இவனுக்கு வாடிக்கையாளர்கள் சற்று குறைவாக இருந்தார்கள் நாட்கள் செல்ல செல்ல வாடிக்கையாளர்கள் அதிகமானார்கள் இவன் வாரம் ஒருமுறை பால்பண்ணையில் பால் கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வான் வருடம் ஒருமுறை தீபாவளி என்றால் போனஸ் மற்றும் ஸ்வீட் பாக்ஸ் கொடுப்பான் தன் வாடிக்கையாளர்களுக்கு இவன் கடையில் ஒரு பையன் வேலை செய்கிறான் இவன் வேலை விஷயமாக ஊத்துமலை ஒரு தோட்டத்திற்கு சொட்டு நீர் அமைக்க செல்லும் போது தனது டூவீலர் குறுக்கே நாய் வந்து விழுந்ததால் இவனது வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது விழுந்தவன் எழுந்து பார்க்கும் போது எதுவும் அடிப்படையில் என்று நினைத்தான் ஆனால் இவனால் எழுந்து நிற்க முடியவில்லை அருகில் இருந்தவர்கள் தான் இவனை தூக்கி விட்டார்கள் தூக்கி விட்ட பிறகு தான் தெரிந்தது இவனின் காலில் பலத்த அடிப்பட்டு இருக்கு என்று பின்பு ஒரு கார் மூலமாக அருகில் உள்ள ஆஸ்பத்திரி சேர்த்தார்கள் இவனை அங்கு டாக்டர் ஸ்கேன் பரிசோதனை செய்த பிறகு காலில் முறிவு ஏற்பட்டு இருக்கு இதற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறினார் அன்று இரவு இவனுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது ஒரு வாரம் காலமாக மருத்துவமனையில் இருந்து பின்பு வீட்டுக்கு வந்தான் இவனால் சரிவர எழுந்து நடக்க முடியாது ஊன்றுகோல் துணையுடன் மூன்று மாத காலம் நடந்தான் பின்பு இவன் காலில் பொருத்தப்பட்ட கம்பியை 8 மாதம் கழித்து தான் எடுக்கப்பட்டது காலில் உள்ள பொருத்தப்பட்ட பிளேட்டை ஒன்றை வருடம் கழித்து மீண்டும் ஆபரேஷன் மூலமாய் அந்த பிளேட் வெளியே எடுத்தார்கள் இப்போ இவன் மீண்டும் பழைய மாதிரி நடக்கிறான் அப்பப்போ காலில் வலியோடு எங்க ஊர்ல பொங்கல் திருநாளை முன்னிட்டு காளியம்மன் திடலில் நாடகம் நடக்கும் இந்த நாடகத்தில் காமெடி கேரக்டர் நடித்து அனைவரையும் சிரிக்க வைப்பான் யாரிடமும் பத்து நிமிடம் பேசினாலும் தன் நெருங்கிய நண்பர்கள் போல் பழகுவான் இவனுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம் மீண்டும் ஒரு புதிய தொழிலை தொடங்க வேண்டும் என்று எண்ணி தன் பால் பண்ணை அருகிலே இ சேவை மையம் அமைத்து அந்த இ சேவை மையத்தில் ஒரு பெண் வேலை செய்து வருகிறாரள் இவன் மிகவும் அரசியல் ஆர்வம் உள்ளவன் 2014ஆம் ஆண்டிலிருந்து இவன் *நாம் தமிழர்* *கட்சியில்* பயணித்து கொண்டிருக்கிறான் (கீழப்பாவூர் ஒன்றியம்) பூலாங்குளம் கிளை தலைவராக பொறுப்பில் உள்ளான் கிராமசபை கூட்டங்களில் தவறாமல் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொள்வான் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் இவன் வசிக்கும் வார்டில் மெம்பர் பதவிக்கு போட்டியிட உள்ளான் தனது சொந்த ஊரான பூலாங்குளத்தில் மீண்டும் ஒரு பால் பண்ணை ஆரம்பித்து நடத்தி வருகிறான் காலை மாலை இருவேளையும் தனது பண்ணைக்கு வரும் பாலை சேகரித்து சுரண்டையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி வருகிறான் இவன் முதலில் வேலை பார்த்த நிறுவனத்திற்கே அந்த பாலை எல்லாம் அனுப்பி வருகிறான் இவன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்றால் இவன் அம்மாவின் உடல்நிலை சரியில்லாத போது திருநெல்வேலி சுதர்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது (அம்மாவுக்கு ஒன்றுமில்லை கவலைப்படாதே நாம நாளை காலை வீட்டுக்கு போய் விடுவோம் என்று சொன்னாங்க) அம்மா இவனிடம் பேசிய கடைசி வார்த்தை இதுதான். அவனது அம்மா அன்று இரவு இறந்து விட்டாங்க அது இவனுக்கு மறக்க முடியாத நாளாகும் ஆடு மாடு கோழி வளர்ப்பதில் அதிகம் விருப்பம் உள்ளவன் மாட்டுப் பொங்கல் அன்று தனது மாடுகளுக்கு பொங்கலிட்டு மரியாதை செய்பவன் இவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் பொழுது இவன் தன் வருமானத்தில் சொந்தமாக இரண்டு பால் பண்ணை வைத்து நடத்தி வருகிறான் அது மட்டுமல்ல ஒரு இ சேவை மையமும் நடத்தி வருகிறான் உழைப்பு ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் அதற்கு இவன் ஒரு உதாரணம் நேரத்தை மதிப்பவன் உழைப்பை வீணாக்க மாட்டான் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு தன் உழைப்பை உயர்த்தியவன் எழுத்து ஆக்கம் *செல்வா* #⏱ஒரு நிமிட கதை📜 #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #நாவல் #செல்வா கவிதை