ShareChat
click to see wallet page
search
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 இன்றைய தினம் பிறந்த நாள் காணும் கழக அவைத் தலைவர் முன்னாள் வக்ஃபுவார்டு சேர்மன் மரியாதைக்குரிய அருமை அண்ணன் டாக்டர். அ. தமிழ் மகன் உசேன் அவர்களுக்கு தலைமைக் கழக பேச்சாளர்கள் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 👏👌👏👌👏👌👏👌👏👌👏👌 மக்கள்திலகத்தின் உண்மைத் தொண்டரின் 90வது பிறந்தநாள் இன்று..! (10.02.1936) MGR ன் உயிர் போன்ற யார் இந்த தமிழ்மகன் உசேன்? கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவரான தமிழ்மகன் உசேன், எம்.ஜி.ஆர் மீது தீவிர பற்று கொண்டவர். அரசுப் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார் இவர். கடந்த 1972 ஆம் ஆண்டு தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது, நாகர்கோவிலில் இருந்து மேலூருக்கு தான் ஓட்டி வந்த அரசுப் பேருந்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு, எம்.ஜி.ஆருக்கு ஆதரவு தெரிவித்தார். தனது அரசுப் பணியையும் ராஜினாமா செய்துவிட்டார். இதன்பின்னர், 'எம்.ஜி.ஆர் தனிக்கட்சியைத் தொடங்க வேண்டும்' என வலியுறுத்தியவர்களில் ஒருவராக இருந்தார். அவ்வாறு எம்.ஜி.ஆர் தனிக்கட்சியைத் தொடங்க வேண்டுமென சென்னை அடையாறில் உள்ள சத்யா ஸ்டூடியோவில் நடைபெற்ற கூட்டத்தில் ரத்தக் கையொப்பமிட்ட 11 பேரில் ஒருவராக தமிழ்மகன் உசேன் இருந்தார். அ.தி.மு.கவின் தொடக்ககாலத் தொண்டர்களில் ஒருவராகப் பார்க்கப்படும் தமிழ்மகன் உசேன், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வக்பு வாரியத் தலைவராகவும் பணியாற்றினார். 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அவர் பாளையம்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், 13 ஏப்ரல் 2016 அன்று தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் பின்னர் அவருக்கு பதிலாக ஹைதர் அலி அதிமுக அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திசம்பர் 1, 2021 அன்று, அவர் கட்சியின் இடைக்கால அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 23 சூன் 2022 அன்று, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மாளிகையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ் மகன் உசேன் அதிமுக கட்சியின் அவைத்தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனக்கு அவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது குறித்து பொதுக்குழுவில் பேசிய தமிழ்மகன் உசேன், '68 ஆண்டுகாலம் பொதுச் சேவையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு இந்த இயக்கத்தின் எளிய தொண்டனாக எந்தவித மனச் சங்கடங்களுக்கும் இடம் கொடுக்காமல் இருந்ததைப் புரிந்து கொண்டு என்னை கவுரவிக்கும் வகையில் அவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஓர் ஏழைத் தொண்டனும் இந்தச் சபையில் அவைத் தலைவராகலாம் என்ற வரலாற்றை உருவாக்கித் தந்துள்ளனர்' எனக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat