ShareChat
click to see wallet page
search
குலம் காக்க நாக பஞ்சமி வழிபாடு எப்படி செய்வது இந்துக்களின் வழிபாட்டு முறையில் நாக தெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமானதாகும். அதன் வழிபாட்டு முறை இந்த வருடம் எப்போது நாக பஞ்சமி வருகின்றது என நாம் இப்பதிவில் பார்ப்போம். நாக பஞ்சமி அன்று நாக சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்தும், புற்றுக்கு மஞ்சள், குங்குமம், முட்டை, பால் ஆகியவை வைத்தும் வழிபடுவதை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். ஒரு கிராமத்தில் தீவிர சிவ பக்தையான பெண் ஒருத்தி, ஏழு அண்ணன்களுடன் வசித்து வந்தாள். ஒரு நாள் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தன்னுடைய அண்ணன்களுக்காக சாப்பாடு கொண்டு சென்றாள். அப்போது வாகனத்தில் ஒரு கருடன், பாம்பு ஒன்றினை காலில் இறுக பிடித்தபடி பறந்து கொண்டிருந்தது. கருடனின் பிடியில் இருந்து தப்ப முடியாமல் நாகமும் தவித்துக் கொண்டு இருந்தது. கருடன் இறுக்கமாக பிடித்திருந்ததால் வலி தாங்க முடியாத நாகம், விஷத்தை கக்கியது. அது அந்த பெண் கொண்டு சென்று உணவில் கலந்தது. அந்த சாப்பிட்ட உணவை சாப்பிட்ட அண்ணன் ஏழு பேரும் உயிரிழந்ததால் சிவனிடம் சென்று முறையிட்டாள் அப்பெண். அவளுக்கு காட்சி கொடுத்த சிவனும், பார்வதியும் நாக பஞ்சமி விரதம் இருக்க வழிகாட்டினார்கள். அவர்கள் கூறிய படியே அந்த பெண்ணும் விரதம் இருந்ததன் காரணமாக அவளுடைய ஏழு அண்ணன்களும் மீண்டும் உயிர் பெற்றதாக புராண கதைகள் சொல்லப்படுகிறது. பகவான் கிருஷ்ணர், காலிங்கன் என்னும் பாம்புடன் சண்டையிட்டு வெற்றி பெற்ற நாளையே நாக பஞ்சமியாக நாம் கொண்டாடுவதாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் நாகங்களை வழிபடுவதால் நாகதோஷம், நாகங்களால் ஏற்படும் தீங்குகள், நாக பயம் போன்றவை நீங்கும் என்பது ஐதீகம். #📺வைரல் தகவல்🤩 #🙏கோவில்
📺வைரல் தகவல்🤩 - ShareChat