ShareChat
click to see wallet page
search
#உலக அமைதி #இஸ்ரேல் vs ஈரான் #பிராத்தனை #ஒற்றுமை #துஆ *உலகச் சூழலைக் கருத்தில் கொண்டு பிரார்த்தனைக்கான அறைகூவல்* நேற்றைய ஜுமுஆ சொற்பொழிவில் ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹு) அவர்கள் கூறியதிலிருந்து ஒரு சில முக்கிய குறிப்புகள்: *​ஒற்றுமையின் அவசியம்:* முஸ்லிம்கள் அனைவரும் 'இஸ்லாமிய உம்மாஹ்' என்ற அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் உலக நாடுகளின் தாக்குதல்களிலிருந்தும், உள்நாட்டுப் பிளவுகளிலிருந்தும் (துண்டாடப்படுவதிலிருந்தும்) நமது கண்ணியத்தைப் பாதுகாக்க முடியும். *​ரமலான் மாதப் பிரார்த்தனை:* இந்த ரமலான் மாதத்தில் நமது சுயத்தேவைகளுக்காக மட்டும் பிரார்த்திக்காமல், ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்திற்காகவும், அமைதிக்காகவும் சிறப்பாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். *​பரஸ்பர போர்களைத் தவிர்த்தல்:* முஸ்லிம்கள் தங்களுக்குள் போரிட்டு ஒருவரையொருவர் கொன்று குவிப்பது அல்லாஹ்வின் கோபத்திற்கு வழிவகுக்கும். இது இம்மையிலும் மறுமையிலும் நஷ்டத்தையே தரும். *​இறைவனிடம் வேண்டுதல்:* முஸ்லிம் நாடுகளில் அமைதி நிலவவும், ஆட்சியாளர்களுக்கு நற்புத்தி கிடைக்கவும், அப்பாவிகள் காக்கப்படவும் நாம் இறைவனிடம் பணிந்து மன்றாட வேண்டும். - 6 மார்ச் 2026
துஆ - e    e - ShareChat