🌿 இன்றைய தேவ வார்த்தை – எலீம் 🌿
வேத வசனம்:
“பின்பு அவர்கள் எலீமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும், எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தன; அவர்கள் அந்நீரருகே பாளயமிட்டார்கள்.”
— யாத்திராகமம் 15:27
இன்றைய செய்தி:
எலீம் என்பது ஓய்வும் புத்துயிர்ப்பும் நிறைந்த இடம்.
மாராவின் கசப்பிற்குப் பிறகு,
கர்த்தர் தம்முடைய ஜனங்களை எலீமுக்கு வழிநடத்தினார்.
உங்கள் வாழ்க்கையிலும் சோதனைகள் நிரந்தரமல்ல.
கஷ்டத்தின் பின், தேவன் தயார் செய்த
ஓய்வின் காலமும் ஆசீர்வாதத்தின் இடமும் நிச்சயமாக வரும்.
இன்று கர்த்தர் சொல்லுகிறார்:
“உன் எலீம் அருகிலேயே உள்ளது —
புதுப்பிப்பும், சமாதானமும், நிறைவான கிருபையும்.”
ஜெப சிந்தனை:
கர்த்தர் உங்கள் ஆத்துமாவை புதுப்பித்து,
பலப்படுத்தி,
ஓய்வின் நீரூற்றுகளுக்கருகே நடத்துவாராக.
—
சகோ. சுதாகர் காட்வின்
Hebron Prayer Ministries
#சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏


