எனக்கு பெண்ணியம், பெண்ணுரிமை, பெண் சமத்துவம் என்றெல்லாம் பேசுவது சுத்தமாக பிடிக்காது. எங்கோ ஜெயகாந்தன் போன்றோர் பெண்ணிய இயக்கத்தை ஆதரிப்பவர்கள் என்று படித்ததால் ஜெயகாந்தன் எழுதியது எதையும் படித்தது கிடையாது!! என்னைக் கேட்டால் தமிழர்களின் கலாச்சாரம், தமிழர் பண்பாடு பெண் சமவாதத்தை ஆதரிக்காது!! தமிழர்கள் முற்போக்கான சிந்தனை கொண்ட கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள்; அதெப்படி பெண்ணியம் தவறாகும்?! என்று நீங்கள் கோபப்பட்டால் சரி தான்!! ஆனால், இந்த பதிவை முழுமையாக படியுங்கள்!! பிறகு நான் கூறுவது புரியும்!! ************************************************** பெண்ணியம், பெண் சமவாதம் போன்றவை எப்போது பேசு பொருளாகும்?! ஒரு கலாச்சாரத்தில் பெண் எந்த வகையில் பார்க்கப் படுகிறாள் என்பதைப் பொருத்தது. சில கலாச்சாரம் பெண்களை மிகவும் கீழாக பார்க்கிறது. உதாரணத்திற்கு மனு தர்மம் பிராமணப் பெண்கள் சூத்திரர்களுக்கு சமம் என்று அவர்கள் சமூக பெண்களையே தாழ்த்தி பேசுகிறது. அது உலகத்தை வெறுக்கும் தர்மம். அங்கு சம்சாரம் என்றால் இரண்டு பொருள் - உலகம் மட்டும் மனைவி!! இரண்டும் முக்திக்கு தடை!!😄 மற்றொரு கலாச்சாரம் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்கிறது. ஆகையால், பெண்களுக்கு வாக்குரிமை, வேலை என்று ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடே இல்லாத சமுதாயத்தை உருவாக்க நினைக்கிறது (women empowerment!!😄). அது மேற்கத்திய கலாச்சாரம். அங்கு ஆண்களும் பெண்களும் சமம். ஆனால், இவற்றிற்கு மாறாக பெண்களை ஆண்களுக்கு மேலாக வைக்கும் சமுதாயம் ஒன்று இருக்கிறது - அதுவே நமது சிவபெருமானின் தமிழ் சைவ சமுதாயம்!! இங்கே நமக்கு பெண்களை ஆண்களை விட அதிகம் உயர்த்தி வைத்து அழகு பார்ப்பது தான் பண்பாடு!! இது நமது சிவபெருமானின் சிவ தத்துவத்தில் இருந்து உதித்தது. ஆகையால், பெண்களை கீழாகவோ, சமமாகவோ பார்க்கும் கலாச்சாரங்கள் பெண்ணுரிமை பேசலாம்!! நமக்கு அது தேவையேயில்லை!! (சிகாராயமான சிவத்தை சேர்ந்தவர்கள் சொல்வார்கள் - "எவனவன் மனைவியையும் வேலைக்கு போகச் சொல்பவன்? சொந்த சம்பாத்தியத்தில் வைத்து காப்பாற்ற திராணியற்றவன்; இவனுக்கு எதற்கு மனைவி?!!😄" ஏனென்றால் இவன் பெண்ணை சமமாக நடத்துகிறானாம்!! நமது கலாச்சாரத்தில் அன்புக்கும், குடும்பத்தை பராமரிக்கவும் தான் மனைவி!! 😄. *************************************************** அப்படியென்றால் சிவனும், சக்தியும் சரிபாதி; பெண்ணுக்கு பாதி உடலை ஈந்தவன் நமது பெருமான்; ஆகையால் இருவரும் சமம் என்பது தான் சைவ சமயம் என்றால் அது உண்மை தான். ஆனால், இதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. ஆதியில் பெண்களை சமுதாயத்தில் ஆண்கள் அதிக உரிமை கொடுத்து ஆராதிக்கும் கலாச்சாரம் தான் இருந்தது!! (இதுவே பிற்காலத்தில் Matriarchy என்று சிதைந்து போனது!). ஆனால், இராமாயண காலத்திற்கு பிறகு பெண்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்ள வேண்டும்; அவர்களும் சொந்த காலில் நிற்கும் சக்தி வேண்டும்; எப்போதும் ஆண் துணையை நாடி இருக்கக் கூடாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது (அந்த கால ராமரின் பழி தீர்க்கும் அடாவடியாக இருக்குமோ?!😄). இதனால் தான் சக்தி சிவனுக்கு நிகர்; சிவமும் சக்தியும் சரி சமம்; என்றெல்லாம் ஏற்பட்டு விட்டது!! அதாவது வெறும் ஊடலாக மட்டும் இருக்க வேண்டிய காதல், நான் பெரியவனா? நீ பெரியவளா என்ற consort கூத்தாக மாறி விட்டது என்று எனக்கு தோன்றுகிறது!!😄😂 அதாவது வெறும் ஊடலாக இருக்க வேண்டியது, காதலுக்கு வலிமை சேர்க்க வேண்டியது டைவர்ஸ் வரைக்கும் கூட போகும் போலிருக்கிறது!! ************************************************ மேற்கூறிய கதை உண்மையோ, பொய்யோ தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை: வர்ணாசிரம மனு தர்மம் போல் பெண்களை இழிவு படுத்துவது நம் கலாச்சாரம் அல்ல!! அவர்கள் பெண்ணுரிமை பேசத்தான் வேண்டும்!!😄 அது போல் பெண்களை சமமாக பார்க்க தவறிய மேற்கத்திய சமுதாயம் பெண்களை சமநிலைக்கு women empowerment மாற்ற முயற்சிக்கிறது!! நமது சிவபெருமானின் சைவ கலாச்சாரம் உலகம் உண்மை; இல்லறமே சிறந்த அறம்; அதற்கு ஆணிவேர் பெண்கள்; ஆகையால் அவர்களை உயர்ந்த நிலையில் வைக்க வேண்டும் என்ற கொள்கையை உடையது. நாம் ஏன் பெண்ணியம் பேச வேண்டும்?! 😄😂. ************************************************ மற்றுமொரு விஷயம் - இந்த விஷயத்தில் நம் கலாச்சார ஆன்மீக உயர் உருவக நிலைகளை பாருங்கள்!! ஒரு நாள் பேருந்தில் ஏறிய போது, ஒரு அழகான பெண் என்னை முழுவதும் ஏறெடுத்துப் பார்க்காமல் ஓரக்கண்ணால் பார்த்து நாணத்தை வெளிப்படுத்துவது போல் பார்த்தாள்!! (அட, இப்போதெல்லாம் பெண்களிடம் நாணத்தை பார்ப்பதெல்லாம் ரொம்ப ரேர் தெரியுமா?!! ) அவள் மனதில் கூறினாள் - "நீ யாரை கொஞ்சினாய்?! என்னைப் போல் இலட்சுமியாக இருந்தால் தான் நாணத்துடன் கொஞ்ச விடாமல் சிணுங்குவாள்" (against lust!!) பெருமாளே உசத்தி!! அதாவது சிவனாக (பார்வதியாக) இருந்தால் கொஞ்ச விடுவாள் என்பது போல. பிறகு, அன்று ஈங்கோய் மலை சென்று விட்டு திரும்பும் போது, "ஈங்கோய் மலை எழுபது" திருமுறை பாடல்களை விளக்கும் யூடியூப் கேட்டு வந்தேன். அதில் ஒரு பாடல்: "உமை மனம் மகிழ, தீயாடும் பரமர் நமது பெருமான்!!". அப்போது தான் புரிந்தது - சிணுங்கினால் அது இலட்சுமி (நாராயணன்), "ஏன்டா காமத்துடன் வந்து கொஞ்சுகிறாய்?" என்று வெகுண்டால் பார்வை + தீ = பார்வதீ!! எனக்கென்னவோ பார்வை தீயாக யாரும் வெகுண்ட மாதிரி தெரியவில்லை; ஆகையால் தான் பரமரே தீயாடுகிறார் என்று நினைக்கிறேன்!! 😄😄😂😂. ****************************
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம


