நானே நானேஎழுதாத ரகசியம் நானே
இயற்கை எழுதிக் வைத்த கவிதை நானே
மல்லிகை வீசும் கார்கூந்தலோ என் கூந்தல்
வானவில்லோ என் புருவம்
வட்ட போட்டு வைத்தான் சூரியன்
என் கண் இரண்டும் கருவிழி திராட்சை
மதுபோதையே தோற்றுப் போகும்
என் காதோ யாழ் ஓசை
மௌனம் கூட பாடல் ஆகும்
என் மூக்கோ பனி சிகரம்
சருகி விளையாடத் தோனுமோ
என் உதடோ ரோசா இதழ்களில்
முத்துச் சரம் பூத்திடுமே
பெண்ணே பெண்ணே எழுதாத ரகசியம் நீயோ
மல்லிகை வீசும் கார்கூந்தலோ உன் கூந்தல்
வானவில்லோ உன் புருவம்
வட்ட போட்டு வைத்தான் சூரியன்
என் மார்போ மலை முகடுகள்
நான் குளித்தால் நீர்வீழ்ச்சி
என் இடையோ இடையினம்
அதில் சிக்கிடும் உன் சுவாசம்
என் கை விரலோ மெல்லினம்
தொட்ட நொடி கனவினம்
என் கால் விரலோ வல்லினம்
நான் நடந்தால் பூமி வணங்கும் கணம்
நானே நானே எழுதாத ரகசியம் நானே
இயற்கை எழுதிக் வைத்த கவிதை நானே
என்னை வர்ணிக்க வார்த்தை போதாதே
என் மௌனமே உன் பெயர் சொல்லுதே #💖நீயே என் சந்தோசம்🥰 #🎵Lyrical Status #💞Feel My Love💖 #song #love

