ShareChat
click to see wallet page
search
703 ஆண்டுகளுக்கு முன் இதே நாள், அதாவது 1323ம் ஆண்டு பங்குனி உத்திரத்தின் 8ம் நாள். ஸ்ரீரங்கம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஓடியாடி விளையாடும் குழந்தைகளின் கொலுசு சத்தம் ரம்மியமாக இருந்தது. ஆண்களும், பெண்களும் பஜனைகள் பாடியபடி பக்தியில் திளைத்திருந்தனர். பூலோக வைகுண்டம், சொர்க்கம் போல காட்சியளித்தது. ஆனால் அடுத்து அரங்கேறிய பயங்கரம் தமிழகத்தின் வரலாற்றையே மாற்றியது. உலுக் கான் என்கிற முகமது பின் துக்ளக் தனது படைகளுடன் ஸ்ரீரங்கத்தின் உள்ளே புகுந்து, திருவிழா கொண்டாடிக் கொண்டிருந்த, நிராயுதபாணியாக இருந்த சாமான்ய பக்தர்களை, மதவெறி கொண்டு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 12,000 பேரை வெட்டிக் கொன்றான். காவிரியாற்றில் ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. கோவில் சூறையாடப்பட்டது. கோவில் பட்டாச்சாரியார்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து, உற்சவரை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். பெருமாளை காக்க, வெள்ளாயி என்பவள் நடனமாடி துக்ளக் படைகளின் கவனத்தை திசை திருப்பினார். அவனது தளபதியை கோபுரத்தின் உச்சிக்கு அழைத்து சென்று, தள்ளி கொன்று, தானும் பிறகு கீழே குதித்து உயிர் துறந்தார். உற்சவர் சிலையை, பட்டர்கள் திருப்பதிக்கு எடுத்து சென்றனர். ஸ்ரீரங்கத்தை கைப்பற்றிய துக்ளக், கோவிலை இழுத்து மூடினான். 48 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சி நீடித்தது. 1371ம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தின் கம்பண்ணர் இஸ்லாமிய ஆட்சியை வீழ்த்தி, மீண்டும் சுயராஜ்யம் ஏற்படுத்தினார். கோவில் மீண்டும் திறக்கப்பட்டது... #பங்குனி உத்திரம் #பங்குனி உத்திரம் 🙏💯 #வரலாற்றில் இன்று
பங்குனி உத்திரம் - ShareChat