Assalamualaikum
தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல்
வரும் மார்ச் 30 ம் தேதி நடை பெற இருக்கிறது.
ஆறு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பார் கவுன்சில் தேர்தலில் 25 உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும்
இருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் 25 உறுப்பினர்களில் ஏழு பெண் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த ஏழு பேரில் இரண்டு பெண் உறுப்பினர்கள் போட்டியின்றி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று விதி நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் சுமார் 5000 முஸ்லிம் வழக்கறிஞர்கள் இருந்தாலும் ஒரூ முஸ்லிம் வழக்கறிஞர் கூட பார்கவுனிலுக்கு தேர்வு செய்ய முடியாத
நிலையில் இருக்கிறது.
இஸ்லாமிய வழக்கறிஞர்கள் ஒற்றுமையோடு யாரேனும் ஒரு வழக்கறிஞரை தேர்வு செய்யலாம் என்கின்ற ஒத்த கருத்தில் 23 விருப்ப
வாக்கு பதிவில் முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் முன்னுரிமை கொடுத்தால் இந்த முறை குறைந்தது இஸ்லாமிய சமூகத்தில் இருந்து
இரண்டு வழக்கறிஞர்கள்
தேர்ந்தெடுக்கபட வாய்ப்பு உள்ளது.
இஸ்லாமிய சமூகத்தில் இருந்து
ஒரு பெண் உறுப்பினர் போட்டியின்றி
நியமிக்க படவேண்டும் என்கின்ற கோரிக்கையையும் இஸ்லாமிய சமூகத்தில் இருந்து எழ வேண்டும்.
பத்து வருடங்கள் வழக்கறிஞர் தொழிலை நிறைவு செய்து இருக்கும்
இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த பெண் வழக்கறிஞர் யாரேனும் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட விரும்பினால்
தமிழ்நாடு வக்ஃபு அன்ட் பர்ஷனல் லா கவுன்சில் சார்பாக ஆதரவு தெரிவித்து
நியமன உறுப்பினராக அவரை தேர்வு செய்ய முயற்சி மேற்கொள்ள தமிழ் நாடு வக்ஃபு அன்ட் பர்ஷனல் லா கவுன்சில்
ஆலோசித்து வருகிறது.
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின்
உறுப்பினராக தமிழ் நாடு பார் கவுன்சிலில் தேர்வு செய்யப்படும் உறுப்பினர் ஒருவர் நியமிக்கபட இது வசதியாக இருக்கும்.
வக்ஃபு சொத்துகளை மீட்கவும்
அவற்றை இஸ்லாமிய சமூகத்தின் பயன்பாட்டிற்கு பயன்படுத்திடவும் வக்ஃபு வாரியத்திற்கு முறையான ஆலோசனை வழங்க நேர்மையும் இறையச்சமும் கொண்ட வழக்கறிஞர் தேவையாக இருக்கிறது.
பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட விரும்பும் தகுதியுள்ள இஸ்லாமிய பெண் வழக்கறிஞர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.
---
எம்.ரஹ்மத்துல்லா B.A,B.L.,
தலைவர்
தமிழ்நாடு வக்ஃபு அன்ட் பர்ஷனல் லா கவுன்சில்
8610496476
--- #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ


