பிரிவு என்பது வேதனையானதுதான், ஆனால் அதைவிடக் கொடுமையான ஒன்று உண்டு, அது... தகுதியே இல்லாத ஒருவனுக்காக, ஒரு பெண் தன்னைத்தானே மெல்ல மெல்லச் சிதைத்துக் கொள்வதைப் பார்ப்பது...
ஒரு காலத்தில் துள்ளிக் குதித்த அந்தப் பெண், இன்று தன் நிழலோடு மட்டும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது இதயம் வலிக்கிறது, அவளுடைய சிரிப்பில் முன்பிருந்த அந்த அழகு இப்போது இல்லை, கண்கள் சிரிப்பதே இல்லை,அவை ஏதோ ஒரு பெரும் பாரத்தைச் சுமந்துகொண்டிருக்கின்றன...
அவள் ஏன் மாறினாள் என்று தெரியுமா,
யாரையும் கவரும் வகையில் உடை உடுத்தியவள், இன்று தன்னை அலங்கரிக்கக்கூட மறந்து நிற்கிறாள், ஆங்காங்கே தொங்கிய தலைமுடி, எண்ணெய் வடியும் முகம், சோர்ந்து போன கண்கள்,அள்ளி சொருகிய சேலை, இவைகளை பற்றி அவளுக்கு கவலை இல்லை,அந்த உரத்த சிரிப்பில் இருந்த நெருப்பு இப்போது அணைந்துவிட்டது...
அவள் சோம்பேறி அல்ல... மாறாக, ஒரு மனிதனிடம் தன் அன்பையும், தன் தகுதியையும் நிரூபிக்கப் போராடிப் போராடித் தளர்ந்து போயிருக்கிறாள், தன்னை மதிக்காத ஒருவனிடம் இருந்து ஒரு சிறு அங்கீகாரத்திற்காக அவள் ஏங்கிய ஏக்கம், அவளை உள்ளுக்குள் கொன்றுவிட்டது...
சத்தமில்லாமல் சிதைக்கபட்டவள் அவள்,
சில ஆண்கள் பெண்களைக் காயப்படுத்துவது சத்தமாக அல்ல, மிக அமைதியாக...
பேசத் துடிக்கும்போது மௌனத்தைப் பரிசளிப்பது,
உன் நலனுக்காகச் சொல்கிறேன் என்ற போர்வையில் அவளது தன்னம்பிக்கையைச் சிதைப்பது,
ஒரு நாள் அன்பாக இருப்பது, மறுநாள் அவளே தன் மீது சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அலட்சியத்தால் அவமானப்படுத்துவது...
இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெண் சுருங்கிப் போகிறாள், தன் உலகத்தை அந்த ஒரு மனிதனுக்குள் சுருக்கிக் கொண்டு, இறுதியில் தன் அடையாளத்தையே தொலைத்துவிடுகிறாள்...
இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள், ஒருவேளை இப்படிப்பட்ட ஒரு சூழலில் இருந்தால்... நீங்கள் கவனிக்கப்படாமல், மதிக்கப்படாமல், அன்பு காட்டப்படாமல் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தால், உங்களுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன்...
உங்களுக்கு அந்த மனவலிமை கிடைக்கட்டும்,
நினைவில் கொள்ளுங்கள்,
உங்கள் இதயம், உங்கள் ஒளி, உங்கள் மன அமைதி, இவை எதையுமே நீங்கள் ஒரு உறவுக்காகப் பலி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை...
உங்களை அலட்சியைத்தால் சிதைக்க செய்யும் ஒருவன் உங்களுக்கு சிறந்த துணையாக இருக்க முடியாது, உங்களை மலரச் செய்யும் ஒருவனே உங்களுக்குத் தகுதியானவன், ஒருநாள் நீங்கள் விழித்தெழுவீர்கள்... அன்று புரியும், நீங்கள் எவ்வளவு விலைமதிப்பற்றவர் என்று...
உங்களை நீங்களே காதலியுங்கள், உங்கள் சிரிப்பை மீட்டெடுங்கள். நீங்கள் ஒரு தேவதை, யாருக்காகவும் சிறகை ஒடித்துக் கொள்ளாதீர்கள்...✍️ #💘Love Quotes & Videos


