ShareChat
click to see wallet page
search
நெல்லையில் ஸ்ரீஅபிமுக்தேஸ்வரா் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் புராதனமான சிவன்கோவில்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் கோடகநல்லூா் தாமிரபரணி கரையில் அமைந்துள்ள கோயிலான ஸ்ரீஅபிமுக்தேசுவரர் திருக்கோவிலும் ஒன்றாகும். பழமைவாய்ந்த இத் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மகா நந்திக்கு மஞ்சள்பொடி மாப்பொடி வாசனைபொடி பால் தயிா் பஞ்சாமிருதம் தேன் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடா்ந்து மூலவா் சுவாமி அம்பாளுக்கும் அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி அம்பாள் மற்றும் நந்தியெம்பெருமானுக்கு மலா்களால் அா்ச்சனை செய்து மகா தீபாரதனை நடைபெற்றது . இதில் திரளானபக்தா்கள் கலந்து கொண்டு தாிசனம் செய்தனா். #திருநெல்வேலி_செய்தி
திருநெல்வேலி_செய்தி - ShareChat
00:39