ShareChat
click to see wallet page
search
நெல்லையில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர். சென்னை வாழ் நாட்டுக்கோட்டை நகரத்தார் நெல்லையில் இருந்து ஆண்டு தோறும் வேண்டுதலாக காவடி எடுத்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம் இன்று ஐந்தாம் ஆண்டு நிகழ்வாக நெல்லையிலிருந்து மேளதாளம் முழங்க காவடி எடுத்து பாதயாத்திரை புறப்பட்டனர். இதில் 30 க்கும் மேற்பட்டோர் காவடி எடுத்துச் சென்றனர். மேலும் பாதயாத்திரைக்கு முன்பாக சிறப்பு பூஜைகள் செய்து அரோகர பக்தி கோஷங்களை முழங்கியவாறு புறப்பட்டு சென்றனர். #திருநெல்வேலி_செய்தி
திருநெல்வேலி_செய்தி - ShareChat
00:30