• 1264 shares
More like this
- Lion S.குணசேகரன்.D.M.E.,#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩49
- JUSTNOWSALEM#JUSTNOWSALEM #🎤My City My Voice📣 #📺வைரல் தகவல்🤩 #JUST NOW SALEM129
- Kaleeswari#📺வைரல் தகவல்🤩1115
- N.ராஜாமுனியப்பன்ஆயுசு ரொம்ப கெட்டிடா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #தெரிந்து கொள்ளுங்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴720
- kiss me 🤍😽!!#👨🦰தளபதி விஜய் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📺வைரல் தகவல்🤩 #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️34123
- Lion S.குணசேகரன்.D.M.E.,#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩1512
- sakthi m#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #💪தி.மு.க #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📰தமிழக அப்டேட்🗞️ ஏன் வெறிகொண்டு ஸ்டாலினைத் தோற்கடித்தனர் தெரியுமா ? இப்படியெல்லாம் அவர் செய்ததினால்தான் 👇 படி, படிக்க வை !!! -ராஜா ராஜேந்திரன் வடையான் நின்று வென்ற தொகுதியான வாரணாசிக்கு, சமீபத்தில் டூர் போன நம்மாள் ஒருவர், அங்கு எங்கெங்கு காணினும் அவர் கண்ட குழந்தைத் தொழிலாளர்கள் அவரை மிகவும் அதிர்ச்சியுறச் செய்தார்கள் என்பதையும் ; இங்கு டபுள் உணவைச் சாப்பிடுவதால் கக்கூஸ்கள் நிரம்பி வழிவதாக தினமனு ஏன் எழுதியது என்பதையும் கோர்த்து, ஒரு பதிவெழுத வேண்டுமென எண்ணியிருந்தேன். ஆனால் அதில் முந்தியது தம்பி ஃபரூக்மீரான் பதிவு. அவருடையப் பதிவிற்கான இழையை மறுமொழிப் பெட்டியில் தந்திருக்கிறேன். துல்லியமாக அவரெழுதிவிட்ட பின் புதிதாக நான் ஒன்றும் எழுதிவிடப் போவதில்லை ! ஒரு நூற்றாண்டாய், ஆமாம் வெறும் நூறு ஆண்டுகளாய்த்தான் திராவிடக் கட்சிகள் வெறிகொண்டு தம் மக்களை படிக்க வைத்துவிட வேண்டுமென, இந்தா உனக்கு இலவசக் கல்வி, இந்தா உனக்கு ஒதுக்கீடு, இந்தா உனக்கு பாதி கட்டணம், இந்தா நீ ஃப்ரியா தங்கிக்கோ, இந்தா உனக்கு மதியச் சாப்பாடு, இந்தா உனக்கு இலவச பேருந்து, இந்தா உனக்கு இலவச சீருடை, இந்தா உனக்கு மடிக்கணினி, இந்தா உனக்கு மிதிவண்டி, இந்தா உனக்கு மாசா மாசம் உதவித்தொகை, இன்னும் சொல்ல மறந்த ஏகப்பட்ட இந்தாக்கள் ... மற்ற மாநிலங்களிலெல்லாம் இவைகள் இல்லையா என்றால், இருக்கின்றன. ஆனால் அனைத்து இன மக்களும் சரிசமமாக அதைப் பங்கிட்டுக் கொள்வதில்லை, அப்படி கொள்ள அங்குள்ள ஆதிக்க மனப்பான்மையினர் விடுவதில்லை. மதத்தின் பெயரால், சாதி அடையாளத்தால் அவர்களில் பலர் ஒடுக்கப்படுகின்றனர். இங்கிருப்பது போல், சமூகநீதி ஒரு சில மாநிலங்களைத் தவிர்த்து, ஏனைய இந்தியாவில் இல்லவே இல்லை ! இதோ, இந்தியாவிலேயே முதன்முறையாக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிவித்தவுடன், பார்ப்பனியம் ஊறிய அத்தனை மூளையிலும் அரிப்பு அதிகமாகிவிட்டன ! ஏனாம் ? இப்ப வாங்க, நாம வடையான் தொகுதிக்கு போவோம். அங்கு கங்கை ஆற்றில் படகோட்டிகளுக்கு உதவியாக இருப்பவர்கள் பலரும் பத்து வயது குழந்தைகள். அதில் கொஞ்சம் ஓரிரு வயது மூத்த குழந்தைகள் அவர்களுடையத் தந்தை அல்லது உறவினர்களின் படகைத் தாமே அந்த ஆற்றில் செலுத்திக் கொண்டிருந்ததாக சமீபத்தில் சுற்றிப் பார்க்கச் சென்ற அவர் எழுதுகிறார் ! அவருக்குத் தெரிந்த இந்தியில் பள்ளிக்குப் போகவில்லையா என்று கேட்டிருக்கிறார். அவர் கண்ட சிறுவனின் உடலமைப்பைப் பார்த்து அவன் ஐந்தாவது படிப்பான் எனக் கணித்தவருக்கு சம்மட்டி அடி. ஒன்பதாவது படிக்க வேண்டிய பையன். அதாவது 14 - 15 வயது. ஆனால் அவன் தனக்கு பள்ளிக்குச் செல்வது பிடிக்கவில்லை என்றிருக்கிறான் ! அவர் துருவவில்லை. பிடிக்கவில்லை என்பதற்குப் பின்னால் பல சமூக அநீதி கதைகள் இருக்கலாம். இதெல்லாம் பானைச் சோற்றில் ஒரு சோறு. ஊட்டச்சத்தில்லாத உணவால் சுருங்கி, வதங்கிக் கிடக்கும் தேகம். ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் தொகுதியே இந்த இலட்சணத்தில்தான் இருக்குமெனில், இதர ஒட்டுமொத்த உத்திரப்பிரதேசம், பீகார், இராஜஸ்தான், குஜராத் கதைகளெல்லாம் எப்படி இருக்கும் ? சங்கிகள் விரும்புவது இத்தகைய இந்தியாவைத்தான். அவர்களைப் பொறுத்தவரை படிப்பதற்கென்றே ஒரு சில இனங்கள் உள்ளன, அவர்கள் மட்டும் படித்தால் போதும். நீதிபதி, பேராசிரியர், வழக்கறிஞர், மருத்துவர், ஆடிட்டர், பொறியாளர், IAS, IPS, IRS பதவிகளையெல்லாம் வகிப்பதற்கென்றே ஒரு சில இனங்கள் உள்ளன. அவர்கள் மட்டுமே அந்தப் பதவிகளை அடைந்தால் போதும். தலைமை அமைச்சர், நிதி அமைச்சர், முதலமைச்சர், இதர அமைச்சர்கள், பிற அரசியல்வாதிகளாவதற்கென்றே சில இனங்கள் உள்ளன. அவரவர்களுக்கு அந்தந்த பதவிகள் கிட்டினால் போதும் ! சங்கிகளின் மிக எளிய கான்செப்ட் இதுதான். இதில் எந்த இனங்களை உயர்த்த வேண்டும், எவைகளை வெட்டி ஒதுக்க வேண்டுமென அவர்கள் பல்லாயிரமாண்டுகளாக அறிந்து வைத்துள்ளனர் ! அதன்படி, தினக்கூலி வேலை, அடியாட்கள் வேலை, கொத்தடிமை வேலை, பிச்சை மட்டுமே எடுப்பது, திருடுவது, கொள்ளையிடுவது, கொல்வது போன்ற கொடுமைகளைச் செய்வதற்கென்று ஒரு பெரிய கூட்டம் அவர்களுக்கு தேவை. நிரந்தரமாக அவர்களுக்கு அந்தக் கூட்டம் கிட்ட வேண்டுமானால் அந்தக் கூட்டத்தில் யாரும் படிக்கக் கூடாது, குழந்தைகளையும் படிக்க வைக்கக் கூடாது. மாறாக, எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் கணக்கில்லாமல் பெற்றுக் கொள்ளலாம். அப்படி பெற்றுப் போட்டால் பெற்றவன் முயன்றாலும் படிக்க வைக்க முடியாது அல்லவா ? ஆனால் நாம் என்ன செய்தோம் ? 1970 களில் நாமிருவர் நமக்கிருவர் என்கிற குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தை இந்திரா கொண்டுவந்த போது, அதை மிக தீவிரமாகப் பரப்புரை செய்து, அப்படி கட்டுப்படுத்திக் கொள்ளும் குடும்பத்திற்கு பல சலுகைகளை அறிவித்தது கலைஞர் அரசு ! இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அந்தத் திட்டம் மாபெரும் வெற்றி பெற்றது ! அதனால்தான் இங்கு கல்வி பெருக பல வாய்ப்புகள் உருவாகின ! மாறாக உ.பி, பீகாரில் இன்றுவரை கூட அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. போக, அந்த திட்டத்தைக் கண்டு அஞ்சும் சங்கிகள் சாமியார்களின் மூலம், "பெற்றோர்களே அதிகக் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் நம் மதம் அழிந்துவிடும், கடவுள் கோபப்படுவார்" என்று ஆன்மீக பரப்புரை வாயிலாகப் பயமுறுத்துகிறார்கள் ! ஓகே. வாழ்க்கைமுறை மாறிவிட்டது. செலவுகள் அதிகரித்து விட்டன. அவனவன் தாமே அதிகக் குழந்தைகள் பெறுவதை குறைத்துவிட்டான். தம்மைப் போல் அல்லல் படாமலிருக்க எப்படியாவது குழந்தைகள் படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டுமென நினைப்பான்தானே ? இன்றில்லாவிட்டாலும் அடுத்த பத்தாண்டுகளில் இது அதிகரிக்கும் அல்லவா ? குறைந்த கூலிக்கு குழந்தை தொழிலாளர்கள்தானே கிட்டுவர் ? குழந்தைகள் எல்லாம் படிக்கப் போய்விட்டால் ? பார்ப்பனிய மூளை என்றுமே நிகழ்காலத்தை மட்டும் சிந்திப்பதில்லை. எதிர்கால சுயநலத்திற்கும் சேர்த்தே சிந்திக்கும். ஆனால் அவன்களுக்கு இறந்த காலத்தில் நடந்தது எதுவும் நினைவிலிருக்காது. நமக்கோ அந்த கடந்த காலம்தான் ஆடியவர்களின் கதைகளைக் கூறி ஆற்றுப்படுத்தும் ! அவன்களுடைய எதிர்கால நலங்களுக்காக கொண்டு வரப்பட்டவைகள்தான் 3 வது, 5 வது, 8 வது படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு. அதையும் மீறி மேலே வந்துவிட்டானா ? நீட் மூலம் வடிகட்டு ! மீண்டும் தமிழ்நாட்டுக்கு வாங்க. கலைஞர் என்ன செய்கிறார் ? 1 முதல் எட்டு வரை படிக்கும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டுமென உத்தரவிடுகிறார் ! 13 வயதுவரை யாரும் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப முடியாது. மீறி வேலைக்கு வைப்பவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார். குழந்தைத் தொழிலாளர் தடைச்சட்டம் அந்தளவு கடுமையாக இங்கு கடைபிடிக்கப்படுகிறது. வடக்கிலோ மக்களாலேயே அது மீறப்படுகிறது அல்லது குழந்தைகளின் கல்வி பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையுமில்லை ! 1 முதல் 8 வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்றவுடன் பதட்டப்படுபவர்கள் யார் ? 3 வது படிக்கும் குழந்தைகளுக்கும் பொதுத் தேர்வு என்றவுடன் மகிழ்பவர்கள் யார் ? என்னாது ? இருவரும் ஒருவரேவா ? ஆமாம். பத்ரி சேஷாத்ரிகள்தான் அது ! அரசுப் பள்ளி மாணவர்கள் படு மூடர்கள் என்பது பத்ரியின் எண்ணம். பலமுறை அவர் அப்படி பேசியபோது எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். என்னுடன் வட சென்னையிலிருக்கும் சில மாநகராட்சி பள்ளிகளுக்கு வாருங்கள், உங்களுடைய வாதங்கள் பொய் என நிருபிக்கிறேன் என சவால் விட்டிருக்கிறேன். அவர் எங்கே வரப்போகிறார் ? ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். 90 ஸ் & 2K Kids களுக்காக சொல்ல வேண்டி வருகிறது. நான் ஆறாம் வகுப்பு படிக்க ஒரு பெரிய பள்ளியில் சேர்க்கப்படுகிறேன். அந்த வகுப்பில் பின்பக்க டெஸ்க்குகளில் செகண்ட் இயர் & தேர்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் சிலர் இருக்கிறார்கள். ப்ரைமரி ஸ்கூலில் அப்படி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அதிலும் பாஸ், ஃபெய்ல் உண்டுதான். இருந்தாலும், ஆறாவதில்தான் அத்தகைய மாணவர்களைப் பார்க்கிறேன். இதில் தேர்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் எனப்படும் ஓரிருவருக்கு அதுதான் கடைசி வாய்ப்பு. அதாவது அந்த வகுப்பிலேயே தொடர்ந்து இருமுறை ஃபெய்ல் ஆனவர்கள். ஹாட்ரிக் அடித்தால் கையில் டிசி, அத்தனை கதைகளையும் அதில் எழுதி கொடுத்து விடுவார்கள். பிறகு எங்கு போய் படிக்க ? அப்படியே மளிகை கடைக்கோ, ஸ்டீல் பட்டரைக்கோ, கிராமங்களெனில் ஆடு மாடு மேய்க்கவோ, எடுபிடி வேலைகள் செய்யவோ போக வேண்டியதுதான் ! ச்சும்மா ஒரு பேச்சுக்கு அன்று தமிழ்நாடு முழுக்கச் சராசரியாக ஐந்து இலட்சம் பேர் படிக்க வந்தார்கள் எனில் இப்படி கழித்துக் கட்டப்படுபவர்களே இரண்டு இலட்சம் பேர் இருப்பார்கள். ஆமாம் ஐந்தில் இரண்டு பங்கு குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு சம்பளமெல்லாம் கொடுக்கவே தேவையில்லை. சாப்பாடு போட்டு, ஞாயிறு சினிமா போக காசு கொடுத்தால் போதும். என்னா இலாபம் ? ஆதிக்கச் சாதிகள் அனுபவித்துவந்த அந்த சொகுசுக்குத்தான் ஆப்பு வைத்தார் கலைஞர். அதனால்தான் இன்றளவும் கேக்கூக்களாய் இருக்கும் சில ஆதிக்கச் சாதி மக்களுக்கு கலைஞர் என்றால் பாகற்காய் ! அதே கலைஞர்தான் ஏற்றத்தாழ்வுகளுடனிருந்த பல வகை கல்விமுறைகளை ஒழித்து, சமச்சீர் கல்வியை கொண்டுவந்தார். அது தரமற்றது, பாசிசம் என எதிர்த்தவர்களில் பெரும்பாலோர் பத்ரி வகையறாக்களே. அதில் ஜெயலலிதா, மிசஸ் ஒய்ஜிபி என அனைவரும் அடக்கம். இன்றுவரை நீட்டை ஆதரிப்பவர்களும் பத்ரி வகையறாக்கள்தான். அவர்களைப் பொறுத்தவரை எப்படியாகிலும் போட்டியாளர்களைத் தோற்கடித்து அல்லது வீழ்த்தி, அந்த இடங்களிலெல்லாம் தம்மை, தம்மை ஆதரிப்பவர்களைக் கொண்டு நிரப்பிவிட வேண்டும் ! இட ஒதுக்கீட்டு முறையில் திறனற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் எனக் காலம் பூராவும் அவதூறு சொல்லி அழுதும், இனி அதை ஒருக்காலும் நீக்க முடியாதெனத் தெரிந்ததும், தங்களுடைய அரசு வந்ததும் தங்களுக்கும் 10% ஒதுக்கீட்டைத் திருடி அபகரித்துக் கொண்டனர் ! போதும். இவ்வளவு செய்தும் அடங்காமல், ஸ்டாலின் இன்னமும் வெறிபிடித்து கல்வியை மிக மிக வறியோர்க்கும், எளியோர்க்கும், அனைத்து மகளிருக்கும் தந்துவிட வேண்டுமென பல நடவடிக்கைகளை மேற்கொள்ள இப்போது அவர்கள் கடுஞ்சினம் கொண்டு நஞ்சை நம் முகம் மீது துப்ப ஆரம்பித்துவிட்டார்கள் ! தாலிக்கு தங்கம் என்று ஜிகினா பூசிய ஓர் அட்டூழியத் திட்டம் உண்டு. ஏழைப் பெண்கள் திருமணத்திற்காக வழங்கப்படும் உதவி அது. கிராமங்களிலும், சிற்றூர்களிலும் பெண்கள் வயதுக்கு வந்துவிட்டாலே, எம்மா தாயீ நீ படிச்சது போதும், தாலிக்கு தங்கம் அப்ளை பண்ணியிருக்கேன், வந்துட்டா அடுத்த முகூர்த்தத்துல உனக்கு கல்யாணம் என்று பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். கலைஞர் பார்த்தார். இதைக் கொஞ்சம் சீர்படுத்தினால் என்ன ? குறைந்தபட்சம் 13 - 14 வயது வரையாவது அந்தப் பெண்களைக் காப்பாற்றுவோமே என்று எட்டு வரை படித்த பெண்களுக்கு மட்டுமே அந்த உதவி கிட்டும் என்றார். பிறகு அதை பத்து வரை என்றாக்கினார். 16 வயது வரையிலேனும் பெண்கள் தப்பித்தனர். ஸ்டாலின் என்ன செய்திருக்கிறார் தெரியுமா ? பெண்களே, நீங்கள் தொடர்ந்து படியுங்கள். கல்லூரிக்கு வாங்க. உங்களுக்கு மாசம் ஆயிரம் ரூபாய் அக்கவுண்ட்ல க்ரெடிட் ஆகும். படிச்சி முடிச்சி வேலைக்குப் போங்க. அதன்பின் உங்கள் வாழ்க்கை, உங்கள் கையில். நீங்க எது அவசியமோ அதைத் தேர்ந்தெடுத்துக்கோங்க என்றுவிட்டார் ! கவிழ்ந்த சுமோக்கள் லபோ திபோவெனக் கதறின, கத்தின. எங்கம்மா திட்டம் போச்சே ? அடிங், அது ஒண்ணும் ங்கொம்மா திட்டமெல்லாம் இல்லை. ஏற்கனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின் எக்ஸ்டென்ஷன் மட்டுமே அது. எப்படி, நீதிக்கட்சியின் & காமராஜரின் மதியஉணவுத் திட்டத்தை சத்துணவுத்திட்டமென தன் பெயரில் எம் ஜி ஆர் எழுதிக்கொண்டாரோ அதற்கு நிகரானது மட்டுமே ங்கொம்மா கொண்டுவந்தது ! மீனைத் தர வேண்டுமா ? மீன் பிடிக்கக் கற்றுத் தர வேண்டுமா ? கலைஞர் மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தார். ஸ்டாலினோ மீனைப் பிடிக்க மட்டுமல்ல, பிடித்த மீனை எங்கு எப்படி விற்றால் உனக்கு அதிக வருவாய் கிட்டும் என்பது வரை கற்றுக் கொடுத்துவிட்டார். காண்டாகுமா - ஆகாதா அவாள்களுக்கு ? இப்படி டபுள், ட்ரிபிள் சாப்பாடு போட்டு படிக்க வாங்கடான்னா கொஞ்ச நஞ்சம் பசங்களும் வேலைக்கு வர மாட்டானுவளே ? பெரியாள் சம்பளம்ன்னா அவன் அவனிஷ்டத்துக்கில்ல கேப்பான் என்கிற முனகல்களுக்கு நிகரானதுதான் கக்கூஸ் நிரம்பி வழிகின்றன என்கிற கேவலமிக்க எழுத்துக்கள் ! வளர்ந்து வரும் நாடுகளில் கல்விக்கு முக்கியத்துவம் தரும் நாடு என்று பார்த்தால் அதில் முதலிடம் தமிழ்நாட்டுக்குத்தான். மாஸ்டர் டிகிரி வரைக்குச் செல்லும் மாணவர்கள் என்று பார்த்தாலும், படித்ததால் அதிகம் வருவாயை சம்பளமாக ஈட்டும் மாணவர்கள் என்று பார்த்தாலும், குறிப்பாக பெண்கள் என்று பார்த்தாலும் அனைத்திலும் தமிழ்நாட்டுக்குத்தான் முதலிடம் கிட்டும் ! ஆனால் அதை இந்தியாவுடன் சேர்த்துப் பார்க்கும் போது நமக்கு பின்னடைவு நேரும் ! இஸ்ரோவின் இத்தகைய அபார தொடர் வெற்றிகளுக்கு காரணம் தமிழ்நாடும், அதன் கல்விமுறையும் என வாஷிங்க்டன் போஸ்டில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். எனவே இனி இந்தியாவுடன் தமிழ்நாட்டை இணைத்தோ, ஒப்பிட்டோ அவர்கள் நம்மை மட்டம் தட்ட தயங்குவார்கள் ! உன்னிடமிருக்கும் எதையும் "அவன்களால் " பறித்துக் கொள்ள முடியும். ஒருபோதும் உன் கல்வியை எந்தவகையிலும் பறிக்க முடியாது என்கிற அசுரன் படத்தின் எழுத்துக்கேற்ப ; படி, படிக்க வை என்கிற அசுரன் ஸ்டாலினுடன் என்றென்றும் துணை நிற்போம் ! வாழ்க தமிழ்நாடு ! நன்றி #ராஜா_ராஜேந்திரன் எழுதிய நாள் : 02/09/2023, சனிக்கிழமை. https://www.facebook.com/share/p/1NV6SYpgSp/2210
- Lion S.குணசேகரன்.D.M.E.,#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩1515
- Lion S.குணசேகரன்.D.M.E.,#📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்817
- தமிழகம் 360°#📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎥Trending வீடியோஸ்📺 #📺வைரல் தகவல்🤩1425