Meeran
அன்புச் சகோதரர் ...
அப்துல் பாசித் புகாரி அவர்கள் உடனடியாக செய்ய வேண்டியது...
எந்த வியாபாரத்திற்காக யாரிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டது ?
அந்த பணத்திற்கான ஒப்பந்தங்கள் எவ்வாறு போடப்பட்டது?
நீங்கள் செய்த வியாபாரத்தின்
நிலை என்ன?
இழப்புகள் எவ்வளவு?
நீங்கள் பெற்ற கடனை தீர்க்க உங்களிடம் ஏதேனும் சொத்துக்கள் உள்ளனவா?
உங்கள் கடன் தீர்க்கப்பட
தேவையான பணம் எவ்வளவு?
இவைகளை நீங்கள் நேரலை மூலம் விளக்கி, உங்கள் கடன் தீர பற்றாக்குறை இருப்பின் ஒரு வங்கிக் கணக்கை அறிவியுங்கள். இந்த உம்மத்தில் நல்லவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். அவர்கள் தங்களால் இயன்ற அளவு அந்த கணக்கில் பணம் செலுத்தி உங்களை இறையருளால் மீட்பார்கள்
இன் ஷா அல்லாஹ்.
இதன் மூலம் தவ்ஹீத் மீது சேற்றைவாரி வீசும் வழி கேடர்களின் முகத்தில் கரிபூசப்படும்.
மாறாக உங்களின் அமைதி தாஃவா களத்திற்கே ஒரு பின்னடைவாக அமையக்கூடும்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன். #சிந்திக்க