arukanimembers
போதைப்பொருட்கள் குறித்து தகவல் தெரிவிக்க செல்போன் எண்கள் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாவட்டத்தில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் புகார் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணையின் திருப்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போலீஸ் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள், சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் கீழ்கண்ட செல்போன் எண்களில் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
📞 7708239100
📞 6385211224
பொதுமக்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புகார் அளிப்பவர்களின் பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் ரகசியமாக காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருட்கள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தயக்கமின்றி தெரிவித்து, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்