சுரேஷ் குமாரா
நேபாளத்துல நடந்த ஒரு மனசை நெகிழ வைக்கிற சம்பவம் இது.
அங்க திடீர்னு பெரிய வெள்ளமும், நிலச்சரிவும் வந்திருச்சு. சுற்றுலாவுக்கு போன நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் ஆத்தோரம் பேருந்தோட மாட்டிக்கிட்டாங்க. சுத்தியும் சேறும் சகதியுமா இருந்ததால மேல ஏற முடியாம எல்லாரும் தவிச்சு நின்னுருக்காங்க.
அப்பதான் கூட இருந்த பூங்குழலிங்கிற பொண்ணு செம தைரியமா ஒரு காரியம் பண்ணிருக்கு. தான் கட்டியிருந்த சேலையை கழட்டி கயிறு மாதிரி புடிச்சுகிட்டு, மேல இருக்குற பாதுகாப்பான இடத்துல இருந்து கீழ இறக்கி விட்டுருக்கு.
அந்த சேலையை கெட்டியா பிடிச்சுக்கிட்டு, அங்க இருந்தவங்க கொடுத்த கை உதவியோட 21 பேரும் ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா பத்திரமா மேல ஏறி உயிர் தப்பிச்சிருக்காங்க.
ஆபத்து நேரத்துல யோசிக்கிற புத்திசாலித்தனமும், மன தைரியமும் தான் உண்மையான ஹீரோயிசம்.
குறிப்பு: இதுல பயன்படுத்தப்பட்ட படம் கவன ஈர்ப்புக்காக வைக்கப்பட்ட மாதிரி படம் மட்டுமே.
#RealHero #HumanityFirst #InspiringStory #TamilPride #📺வைரல் தகவல்🤩