More like this
- Subbiah#தெரிந்து கொள்வோம் #👉வாழ்க்கை பாடங்கள்1614
- janani#தெரிந்துகொள்ளுவோம் #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #ஆரோகிய குறிப்புகள்🚹108
- RamaswamyAnnamali#🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம் ஸ்ரீராம மயம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 *கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்* பகவான் கிருஷ்ணரை எத்தனை முறை பார்தாலும் சலிப்படைவதில்லை 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 நித்யம் நிரீக்ஷமானானாம் யத் அபி த்வாரகௌகஸாம் ந வித்ருப்யந்தி ஹி த்ருச: ஸ்ரீயோ தாமாங்கம் அச்யுதம் மொழிபெயர்ப்பு துவாரகா வாசிகள், அழகுக் களஞ்சியமான குறையற்ற பகவானை அடிக்கடி காண்பதில் பழக்கப்பட்டிருந்தனர் என்றபோதிலும், அதில் அவர்களுக்கு சலிப்பே ஏற்படவில்லை. பொருளுரை தங்களது மாளிகைகளின் உச்சிக்கு ஏறிச் சென்ற துவாரகாபுரி பெண்கள், பகவானின் குறையற்ற அழகிய திருவுடலை இதற்கு முன் தாங்கள் பலமுறை கண்டிருப்பதைப் பற்றி ஒருபோதும் சிந்தித்துப் பார்க்கவில்லை. பகவானைக் காண்பதில் அவர்களுக்கு திகட்டல் உண்டாகவில்லை என்பதையே இது குறிக்கிறது. பௌதிக அழகு கொண்ட எதையும் சில முறைகள் காண்பதால் முடிவில் அது கவர்ச்சியற்றதாகிவிடுகிறது. இது திகட்டச் செய்யும் விதியாகும். இவ்விதியால் ஜடவுலகில் மட்டுமே செயற்பட முடியும். ஆன்மீக உலகில் இதற்கு இடமில்லை. குறையற்றவர் என்ற சொல் இங்கு கவனிக்கத்தக்கதாகும். ஏனெனில், தனிப்பெருங் கருணையால் பகவான் பூமியில் அவதரித்தபோதிலும், அவர் குறையற்றவராகவே இருக்கிறார். ஜீவராசிகள் குறையுடையவர்களாவர். ஏனெனில், ஜடவுலக தொடர்புக்கு அவர்கள் உட்படும்பொழுது அவர்களுடைய ஆன்மீகத் தன்மை மங்கிவிடுகிறது. இதனல் பௌதிகமான முறையில் அடையப்பட்ட உடல் இயற்கைச் சட்டங்களின் கீழ், பிறப்பு, வளர்ச்சி, மாற்றம், சூழ்நிலை, சீரழிவு மற்றும் மரணம் ஆகியவற்றிற்கு உட்பட்டதாக இருக்கிறது. பகவானின் உடல் அத்தகையதல்ல. சுய உருவில் அவதரிக்கும் அவர், இயற்கைக் குணங்களின் சட்டங்களுக்கு ஒருபோதும் உட்படுவதே இல்லை. அவரது உடல் படைக்கப்பட்டுள்ள அனைத்திற்கும் பிறப்பிடமாகும். மேலும் அது நம்முடைய அனுபவத்திற்கு அப்பாற்பட்ட அழகுக் களஞ்சியமாகும். பகவானின் திவ்யமான உடலில் எப்பொழுதும் புதுப்புது அழகுகள் தோன்றிக்கொண்டே இருப்பதால் அவரது உன்னதமான உடலைக் காண்பதில் ஒருவருக்கும் திகட்டல் ஏற்படுவதே இல்லை. பகவானின் உன்னதமான நாமம், உருவம், இயல்புகள், பரிவாரம் போன்ற அனைத்தும் ஆன்மீகமானவை ஆகும். அவரது புனித நாமத்தைப் பாடுவதிலும், அவரது இயல்புகளைப் பற்றி விவாதிப்பதிலும் திகட்டல் உண்டாவதில்லை. மேலும் பகவானுடைய சகாக்களின் எண்ணிக்கைக்கு ஓர் அளவேயில்லை. அவர் அனைத்திற்கும் பிற்ப்பிடமும், எல்லையற்றவருமாவார். ஶ்ரீமத் பாகவதம் 1.11.25 / பொருளுரை 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே ஓம் நமோ வெங்கடேசாய 🙏723
- nirmal#தெரிந்து கொள்வோம்9993K
- nirmal#தெரிந்து கொள்வோம்2639
- RamaswamyAnnamali#🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம் #காவியநிறைவும் 🪷 பகவத் திருவடிகளில் சரணாகதி நீலமேக சியாமளனாக விளங்கும் ஸ்ரீகிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளில் நம் ஆன்மாவை முழுமையாகக் கரைத்துச் சமர்ப்பிக்கும்போது, கர்மத்தின் கொடிய விஷங்கள்கூட அமுதமாக மாறுகின்றன. ஆணவத்தின் சிறகுகளை விரித்து, தன் விருப்பம்போல் சுதந்திரமாகப் பறக்க முயலும்போதுதான் ஜீவாத்மா மீண்டும் மீண்டும் மாயையின் வலைக்கண்ணிகளில் சிக்கிக் கொள்கிறது. ஆனால், அந்தப் பரம கருணாமூர்த்தியான கிருஷ்ணரிடம் அனைத்தையும் முழுமையாக அர்ப்பணிக்கும் தூய பக்தனை, கர்மபலன்களின் கொடிய சூறைக்காற்று ஒருபோதும் தீண்டாது. 🌺 கீதாமிர்தமும் தெய்வீக ஒளியும் பகவத்கீதை நமக்கு அளிக்கும் நித்தியமான தெய்வீக ஞானத்தை இதயத்தில் ஏந்திக் கொள்பவன், பௌதிக இயற்கையின் முக்குணங்களாகிய கயிறுகளின் கட்டுகளை அறுத்து, ஆன்மீக நிறைவை அடைகிறான். அத்தகையவன் இருளிலோ அழிவின் பாதையிலோ ஒருபோதும் வீழ்ச்சியடைவதில்லை. “பகவானின் திருவடிகளைச் சரணடையும் உயிர், அறியாமையின் இருளைக் கடந்து தெய்வீக ஒளியை அடைகிறது.” (ஸ்ரீமத் பாகவதம் 4.26.8) 🌿 பக்தியின் புனித நீரோடை பகவத் சேவை என்பது பாவங்களைப் புனிதப்படுத்தும் தெய்வீக கங்கை போன்றது. கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்து, அவரது பக்தி என்னும் மணம் வீசும் நந்தவனத்திற்குள் நாம் நுழையும்போது, பிறவிப் பிறவியாக நம்மைத் தொடர்ந்து வந்த பாவங்களின் பெருங்கடல்கள் கூட வற்றிப் போகின்றன. (ஸ்ரீமத் பாகவதம் 6.1.7) பகவானின் நாமஸ்மரணமும், சேவையும், சரணாகதியும் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் புனிதப் பாதையாகும். 🦚 முகுந்த சரணமும் விமோட்சமும் “முகுந்தனிடம் சரணடைந்தவன்...” முகுந்தனாகிய ஸ்ரீகிருஷ்ணரிடம் முழுமையான அடைக்கலம் புகும் பக்தன், இந்தப் பௌதிக உலகில் தன்னைப் பிணைத்திருக்கும் எண்ணற்ற கடமைகள், பற்றுகள், கர்மக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிலிருந்து படிப்படியாக விடுதலை பெறுகிறான். பகவானிடம் ஆத்மசமர்ப்பணம் செய்வதே மனிதப் பிறவியின் உயர்ந்த கடமை. நாம் எதைச் செய்தாலும், எதைப் பெற்றாலும், எதை இழந்தாலும், இறுதியில் அனைத்தையும் கிருஷ்ணரின் திருவடிகளில் அர்ப்பணிப்பதே உண்மையான சரணாகதி. 💙 இதயத்திற்கான ஒரு செய்தி ஆகவே, மனமே... இனி இந்த உலகத்தின் நிலையற்ற ஆசைகளின் நிழல்களில் அலைந்து திரியாதே. உன் இதயம் என்னும் மணம் வீசும் தாமரை மலரை, அந்த முரளீதரனின் மென்மையான திருவடிகளில் சமர்ப்பித்துவிடு. உன் மகிழ்ச்சிகளையும், உன் கண்ணீரையும், அந்த வேணுகானத்தின் இனிய இசையாக மாற்றிவிடு. அப்போது... கர்மத்தின் சக்கரவியூகங்கள் உன்னைத் தொடாமல் விலகிச் செல்லும். அந்தக் கருணைக் கடலில், உனக்காக நித்திய அமைதியும், நிரந்தர விடுதலையும் தெய்வீக ஒளியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும். கிருஷ்ணரிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்துவிட்டால், “நான்” என்ற பாரம் மறைந்து, “அவன்” என்ற ஆனந்தம் மட்டுமே எஞ்சும். 🦚 ராதே கிருஷ்ணா ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏1018
- janani#தெரிந்துகொள்ளுவோம் #ஆரோகிய குறிப்புகள்🚹1220
- -guna#தெரிந்து கொள்வோம்196
- LPR#தெரிந்து கொள்வோம்1422
- PRAVEENA 💕#தெரிந்து கொள்வோம் #🤔 Unknown Facts #🤔Emoji புதிர்கள் #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் #📚 மாதிரி வினா-விடை1417