அம்மை ஆச்சி நேசன்
நீர்சடையன் நாயகி நிமலி அம்மை ஆச்சியின் அமர செல்வர் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 80வது திருத்தலம் திருவீழிமிழலை
அருள்மிகு சுந்தரகுசாம்பிகை உடனுறை விழியழகர் விழிச்செடி விஷ்ணு தீர்த்தம்
பாடல் 8 சாதாரி
ஆன வலியில் தசமுகன் தலையர் அங்கவணி ஆழிவிரலால் ஊனமரு உயர்ந்த குருதி புனலில் வீழ்தரவு உணர்ந்த பரனூர்
தேனமர் திருந்து பொழில் செங்கனக மாளிகை திகழ்ந்த மதிளோடு ஆன திருவுற்று
வளர் அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே
பொழிப்புரை:
தசமுகன் எனப்படும் இராவணன் தன் வலிமையைப் பெரிதாகக் கருதிக் கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க, அவனது தலைகள் அரைபடும்படி அழகிய திருக்காற்பெருவிரலை ஊன்றி, அவனுடைய உடலிலிருந்து குருதி பெருகுமாறு செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது தேன்மணம் கமழும் சோலைகளும், செம்பொன் மாளிகைகளும், உயர்ந்த மதில்களும் உடையதாய்ச் செல்வம் பெருகி வளரும் அந்தணர்கள் நிறைந்த அழகிய திருவீழிநகராகும். #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்