k.R
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌸 ஆடி மாத ஸ்டேட்டஸ்🙏 #🙏 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
🦜*ஆடி - ஆண்டாள்!* 🦜
"கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்,
சோதி மணிமாடந் தோன்றுமூர்,
நீதியில் நல்ல பத்தர் வாழுமூர்,
நான்மறைகள் ஓதும் ஊர்,
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்!"
எல்லா அவதாரங்கள் முடிந்தும் பலன் ஏதும் இல்லாமல் போகவே, எம்பெருமான் இந்த உலகம் உய்ய பூமிபிராட்டியை அவதரிக்கச் செய்தான்!
அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தரின் திருமகளாய் ஆடி மாதம், சுக்லபக்ஷம், சதுர்தசி, செவ்வாய் கிழமை, பூர நக்ஷத்திரத்தில் துளசி வனத்தில் தோன்றினாள்!
அவர் தான் *கோதா* என்ற *கோதை!*
கோதா என்றால் 'நல்வாக்கை' அருள்பவள்!!
கோதை இருவிதமான மாலைகளைக் கட்டினாள் -
பூக்களால் ஆன பூமாலை! அதுவே அவளுடைய தூதாக சென்றது.
மற்றொன்று பாமாலை! அதுவே *திருப்பாவை*(30),
*நாச்சியார் திருமொழி*(143)
எனும் தீந்தமிழ் பாசுரங்களாகும்!
*திருப்பாவையில்*
"தி" என்ற எழுத்து "திருமாலை" குறிக்கும்!
"திரு" என்ற சொல் "மஹாலக்ஷ்மியை" குறிக்கும்!
"திருப்பா" என்ற சொல் "திருப்பாற்கடலை" குறிக்கும்!
கோதையின் திருப்பாவை "வேதமனைத்துக்கும் வித்தாகும்!"
*கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பது வம்பு!*
*[5×5+5= 30 திருப்பாவை பாசுரங்கள் 30]✍🏼🌹*
🙏🙏🙏🙏🙏💞K.R💞🙏🙏🙏🙏🙏