9 shares
More like this
- MUTHUPANDIAN RAMKUMAR#வரலட்சுமி ௮ம்மன் #எங்க வீட்டு வரலட்சுமி பூஜை #வரலட்சுமி பூஜை தின நல்வாழ்த்துக்கள் 🌺🙏 #வரலட்சுமி பூஜை அலங்காரம் #வரலட்சுமி விரதம் 🙏🙏 விரதம் ஸ்பெஷல்* 🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿. 🌺🕊🌺🕊🌺🕊🌺🕊🌺🕊🌺🕊🌺🕊🌺🕊🌺 🌹சகல ஐஸ்வர்யங்களை பெற்று தரும் வரலட்சுமி விரதம் !🌹 🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕 🌿 வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்களின் நோன்பாகும். இந்நாளில் வீட்டைச் சுத்தம் செய்து விளக்கேற்றி வாசனைப் புகையினால் இல்லத்தை நிறைத்து கலசம் ஒன்றில் லட்சுமியை வணங்கித் தொடங்குவர். 🌿 கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர். 🌿 நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள். மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவே தான் அன்னை மகாலட்சுமியை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொள்கிறார்கள். ஆகஸ்டு 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். 🌿 லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். 🌿லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும். வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளி ல் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 🌿அன்னை மகாலட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், 🌿பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மாவதி என்றும், 🌿 அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும் 🌿 , ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், 🌿ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், 🌿 பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்ற ப்பட்டமையால் சீதை என்றும் 🌿 பாற்கடலிலிருந்து தோன்றிய தால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள். 🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊 🔥எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள்.இதனால் தான் திருமணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர். 🔥 மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம். ⭐ லட்சுமியின் திருக்கரங்கள் ஸ்வர்ண ஹஸ்தம் எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத ஹஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள். லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன. 🍒 மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள். 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🍒 வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும். மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும். அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும். 🌺 செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிட லாம். வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். 🌿 லட்சுமியை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம். வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும். வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது. வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது. 🌳 நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம். துளசி செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் சேர்த்து நம் வீட்டில் வளர்ப்பது நல்லது. 🍑 பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம்,சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள். 🌺 மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ. மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம். 🌿 நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும். ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார். 🌿 மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமி யின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படு கின்றன. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர். 🌿 வரலட்சுமி விரதத்தின் போது வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம்தான் மகாலட்சுமி க்கு பிடித்தமானது. சூரிய உதயத்திற்கு முன்னாள் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். உங்க கையால் கோலம் போட்டு மகாலட்சுமியை அழைக்க வேண்டும். லட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக விநாயகர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜையை மனநிறை வோடு செய்ய வேண்டும். ஒரு ரூபாய்க்கு கற்பூரம் ஏற்றி வரலட்சுமியை வழிபட்டாலும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். 🌿 மஞ்சள் குங்குமம் பூ வைத்து முடி கயிறு வைத்து பூஜிக்கலாம். ஒன்பது முடிச்சு இருக்கும் நோன்புக்கயிறு அவசியம். வயது மூத்த சுமங்கலிகள் கையால் நோன்புக்கயிறு கட்டிக்கெள்ள வேண்டும். சர்க்கரைப் பொங்கல் பாயசம், தாமரை மலர் அவசியம். மனதில் பக்தியுடன் சந்தோஷத்துடன் பூஜை செய்ய வேண்டும். 🌿 பட்டுத்துணியால் அவசியம் அம்மனை அலங்கரிக்க வேண்டும். சரிகை உள்ள துணியால் அலங்கரிக்க வேண்டும். வெள்ளை கறுப்பு நிறத்தில் வஸ்திரம் இருக்கக்கூடாது. மஞ்சள் நிறம், சந்தன நிறத்தில் வஸ்திரம் இருந்தால் அற்புதமானது. 🌿 கலசத்தில் ஸ்ரீ வரலட்சுமி நமஹ என்று இருக்க வேண்டும். அம்மன் அலங்காரம் செய்த உடன் முடிக்கயிறு தயாரிக்கும் போது 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலைதான் இந்த முடிச்சு போடவேண்டும். பூஜை செய்பவர்கள் பட்டு வஸ்திரம்தான் அவசியம் அணிய வேண்டும். சரிகை இருப்பது அவசியம். 🌿 பூஜைக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு,வளையல், ரவிக்கை துணி கொடுத்து ஆசி பெற வேண்டும். வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. 🌿 லஷ்மியை மகிழ்விக்கும் இந்த விரதமிருக் கும் பெண்மணி இவ்வுலகில் சகல போகங்களையும் பெற்று அனுபவித்தபின் வைகுந்தம் சேருவாள். எல்லா சுக்லபட்ச வெள்ளிக்கிழமைகளில் மஹாலஷ்மியை முறைப்படி பூஜிப்பவர்கள் வாழ்நாள் முழுதும் செல்வ செழிப்புடன் ஆரோக்கிய மாக வாழ்வார்கள். அவர்கள் குடும்பம் தழைக்கும். 🌿 இந்த விரதக்கதையை படிப்பவர்கள் கேட்பவர்களும் வரலஷ்மியின் அருளால் தனதான்ய சம்பத்துடன் சௌக்கிய மாக வாழ்வார்கள் என தேவர்கள் வாழ்த்துகின்றனர். 🙏🙏🙏 வரலட்சுமி நோன்பு விரதத்தை நடத்துபவரு க்கு எவ்வளவு சிறப்புகள் கிடைக்குமோ, அதே போல் அதில் கலந்து கொள்பவர்களுக்கும் சிறப்பு வந்து சேரும். இந்த விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம். 🍒🌾🍒🌾🍒🌾🍒🌾🍒🌾🍒🌾🍒🌾🍒🌾🍒 🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺 🍁#இங்குதான்_நிரந்தரமாக #இருப்பேன்: #லஷ்மி_பரந்தாமனிடம் #சொன்ன_இடம் ? #ஒரு_முறை #வைகுண்டத்தில்_ஸ்ரீமந் #நாராயணனும்.. #மகாலஷ்மியும்_பேசிக் #கொண்டிருந்தார்கள்.. 🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋 🌺 பேச்சு அப்படியே பூலோகம் பற்றி வந்தது.. பரந்தாமனுக்கு தேவியை கோபப்படுத்தி பார்க்க ஆசைவந்தது. எப்போதும் சதா கேள்வி கேட்டு துளைக்கும் மகாலஷ்மியை இன்று நாம் கேட்கலாம் என்று நினைத்தவர்... ”தேவி உன்னிடம் ஒரு உதவி கேட்கலாமா” என்றார்.. ”என்னிடம் தாங்கள் என்ன கேட்க போகிறீர்கள்? .. சுவாமி... கேளுங்களேன் எனக்குத் தெரிந்ததைச் செய்கிறேன்” என்றாள்.. 🌺 “பக்தர்கள் படும் பாட்டை காண சகியாமல் எப்போதும் உங்கள் பக்தன் நல்லவன்.. அவன் இப்படிச் செய்கிறான். இவன் இப்படி இருக்கிறான் என்று பூலோகப் பெண்கள் போல் புலம்புகிறாயே.. நீ ஒரு நாள் இவர்களையெல்லாம் பார்த்துக் கொள்ள கூடாதா? நான் சற்றேனும் ஓய்வெடுப்பேனே?” என்றார்.. ”அது எப்படி முடியும் சுவாமி.. அவ்வளவு பெரிய சுமையை என்னால் சுமக்க முடியுமா..?” என்று தயங்கினாள் மகாலஷ்மி.. ”சரி ஒரு நாள் வேண்டாம்.. ஒரு மணி நேரம்..” என்றார்... அதற்கும் சம்மதிக்கவில்லை மகாலஷ்மி... ”ஒரு நிமிடம்” என்றார் மீண்டும் விடாமல்... ”என்னை நம்பி இவ்வளவு பெரிய சுமையை கொடுக்கிறீர் களே” என்று சொன்னாலும் ஏற்றுக்கொண்டாள் லஷ்மி தேவி.. ஒரு நிமிடத்தில் என்ன சுமை வந்துவிடப்போகிறது என்பது அவளுக்கு... 🌺 ஆனால் ஒரு நாழிகை போதுமே பிரளயம் வருவதற்கு.. பக்தர்களின் புலம்பல் களும் வேண்டுதல்களும் துன்பங்களும் துயரங்களும் ரீங்காரமாக தேவியின் செவிகளில் விழுந்தது..ஒன்றா இரண்டா ஓராயிரமா முடியவில்லை ”சுவாமி” என்று ஸ்ரீமந் நாராயணனிடம் அடைக்கலமானாள்.. புன்னகையுடன் பரந்தாமன் கேட்டார். ”என்னாயிற்று தேவி..” என்றார். ”இவ்வளவு சுமையெல்லாம் என்னி டம் கொடுக்காதீர்கள்.. 🌺 எனக்கு பிடித்த பக்தர்களின் வீட்டில் நான் வசித்துக் கொள் கிறேன் என்றாள்.. 🍒 ”நீ வசிக்கும் வீடு எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பு கிறாய்?” என்று கேட்டார் பரந்தாமன். 🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊 🍒 ”தர்மம் செய்பவர்கள், 🍒இரக்க குணம் உள்ளவர்கள் 🍒, பிற உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவர்கள், 🍒 பொய் சொல்லாதவர்கள், 🍒 கர்வமில்லாதவர்கள், 🍒 கடவுள் மீது பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருப்பவர்கள், 🍒அமைதியும் அன்பும் கொண்டிருப் பவர்களின் வீட்டில் தான் நிரந்தரமாக வசிப்பேன்” என்றாள்.. 🍒 ஸ்ரீமந் நாராயணன் அகம் மகிழ்ந்து ”அப்படியே ஆகட்டும் தேவி” என்று வாக்களித்தார். உங்கள் வீட்டிலும் லஷ்மி வாசம் செய்ய முதலில் கடைப்பிடிக்க வேண்டியது மேலே சொன்னதுதான்.. 🌺 அன்பும் 🌺 , இரக்கமும், 🌺 பொறுமையும், 🌺 இறை நம்பிக்கையும் 🌺 ஶ்ரீ லஷ்மி நிரந்தரமாக வாசம் செய்யும் இடங்களே... 🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎4227
- Bindu#🌸 வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துகள்! 🙏 #🌸 வரமஹாலக்ஷ்மி ஸ்டேட்டஸ்🪔 #🌻வாழ்த்துக்கள்💐 #💐வாழ்த்து #📸பக்தி படம்7113
- 𝄞⃝🦋🇧𝒉𝒖𝒗𝒂𝒏𝒂𝑺𝒖𝒃𝒓𝒂𝒎𝒂𝒏𝒊😻🇲eow�҈҉⃝👸#🌸 வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துகள்! 🙏 #🪷 லக்ஷ்மி அம்மன் பாடல்கள் 🕉️ #💵மகாலக்ஷ்மி #👗 வரமஹாலட்சுமி ட்ரெண்ட்ஸ் ✨ #🌺 லட்சுமி தேவி 🙏5K3K
- Lakshmipriya Sakthivel#🌸 வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துகள்! 🙏 #lakshmi #🌸 வரமஹாலக்ஷ்மி ஸ்டேட்டஸ்🪔 #ஆன்மிகம் #pakthi9K4K
- 🕺என் உயிர் தேடல் நீ👉#🌸 வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துகள்! 🙏 #🌸 வரமஹாலக்ஷ்மி ஸ்டேட்டஸ்🪔 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏கோவில்3K1K
- பூங்குழலி#🌸 வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துகள்! 🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🙏வணக்கம்💐8K1K
- 💙𝐁𝐥𝐮𝐞𝐐𝐮𝐞𝐞𝐧💙#🌸 வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துகள்! 🙏 #🌺 லட்சுமி தேவி 🙏 #🍲 வரலக்ஷ்மி விரத ஸ்பெஷல் சமையல் 🌸 #👌அருமையான ஸ்டேட்டஸ் #🪔 பூஜை முறைகள் & மகாலட்சுமி பரிகாரங்கள் 🌸22K17K
- 💙𝐁𝐥𝐮𝐞𝐐𝐮𝐞𝐞𝐧💙#🌸 வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துகள்! 🙏 #🌺 லட்சுமி தேவி 🙏 #🪔 பூஜை முறைகள் & மகாலட்சுமி பரிகாரங்கள் 🌸 #👌அருமையான ஸ்டேட்டஸ் #🌸 வரமஹாலக்ஷ்மி விரைவில் 🪔7K3K
- 💖Lakshmi💖#🌸 வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துகள்! 🙏 #🌺 லட்சுமி தேவி 🙏 #🪷 லக்ஷ்மி அம்மன் பாடல்கள் 🕉️ #🌸 வரமஹாலக்ஷ்மி ஸ்டேட்டஸ்🪔 #🪷 அஷ்ட லட்சுமி பூஜை 🕯️1K1K
- 💚ॐ 𝐒𝛜ℓⱱ𝖎 ⁷⁸⁶💜#🌸 வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துகள்! 🙏 #🌸 வரமஹாலக்ஷ்மி ஸ்டேட்டஸ்🪔 #🌺 லட்சுமி தேவி 🙏 #🎵 இசை மழை #👑🇰𝓲𝓷𝓰💚🫅👸💜🇶𝓾𝓮𝓮𝓷👑1K816