Murugan
545 views 4 days ago
ஜார்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வு வாரியம் (JSSC) நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அம்மாநில மாணவர்கள் ராஞ்சியில் உள்ள சட்டமன்றத்தை நோக்கிப் பிரம்மாண்ட முற்றுகைப் பேரணியை (Vidhan Sabha March) தொடங்கினர். 14-வது JPSC சிவில் சர்வீசஸ் தேர்வு உட்பட 3 தேர்வுகளை ரத்து செய்ய அரசு ஒப்புக்கொண்ட போதிலும், JSSC-CGL தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ (CBI) விசாரணை அமைக்க வேண்டும் என்பதில் மாணவர் கள் உறுதியாக உள்ளதால் இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் தண்ணீரை பீய்ச்சியடித்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினர். இருப்பினும், போராட்டக்காரர் கள் கலைந்து செல்லாமல், பல தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேறினர். முன்னதாக ஜேபிஎஸ்சி அமைப்பின் மூன்று உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் மாணவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும், அரசியல் கட்சிகளின் தூண்டுதலுக்குப் பலியாக வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அசம்பாவிதங்களைத் தடுக்க ராஞ்சி சட்டமன்ற வளாகத்தைச் சுற்றி 163-வது தடை உத்தரவு (Prohibitory orders) பிறப்பிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #செய்திகளின் உலகம்
10 likes
14 shares

More like this