Varahi
#திருத்தணி
அந்தநாள்ஞாபகம்:
🦚
ஆண்டு தோறும்
டிசம்பர்.31.
திருத்தணி
படிவிழாவில்
அடியேனைப்
பலர் எதிர்
பார்ப்பார்கள்.
ஏன் தெரியுமா.?
சினிமாப்பாடல்
மெட்டுக்களில்
முருகன்மீது
பாட்டெழுதிப்
புத்தகமாக
அச்சிட்டுக்
கொண்டு
"பதினைந்து பைசா"வுக்குக்
குறைந்த விலையில்
விற்பேன்.அதுவும்
பாடிக்கொண்டே.!
உனக்கு எனக்கு
எனப்
போட்டி போட்டுக்
கொண்டு
வாங்குவர்.!
பலபஜனைக்
கோஷ்டிகள்
இசைக்
கருவிகளோடு
ஆங்காங்கே
படிகளில்அமர்ந்து
பாடுவர்.
நானும்பாடி
ஆடுவன்.!
ஆனந்த மான
அந்தநாள்
ஞாபகம்
நெஞ்சிலே
வந்ததால்அதனை
உங்களுடன்
பகிர்ந்து
கொள்கிறேன்.!
இதெல்லாம்
எப்பதெரியுமா.?
1965.ல்...!
முருகா.!
இதோ ஓரிரு
பாடல்கள்:
🦚
1.இதோஎந்தன்
தெய்வம்.எ.மெட்டு.
படம்:பாபு.
🍁
இதோ வடிவேலன்
முன்னாலே-நாம்
சரண்புகுந்து
வாழ்ந்திடுவோம்
தன்னாலே.!
வாசமுள்ள
மலைகளிலே
அவனும்
வாழ்கிறான்-அருள்
நேசமுள்ள
நெஞ்சினிலே
கோயில்
கொள்கிறான்.!
( இதோஎந்தன்..)
அவன்
பழமுதிரும்
சோலையிலே
மணப்பான்-திருப்
பரங்கிரியில்
தேன் எனவே
இனிப்பான்-வரும்
ஆபத்திலே
நமக்குத் துணை
இருப்பான்-வடி
வேலுடனே
வந்து வினை
அறுப்பான்.!
(இதோஎந்தன்..)
பழநியிலே
அவனை தினம் நம்பி-பல
காவடிகள்
ஆடுதடா
தம்பி- அவன்
பரிவுடனே
நின்றிருப்பான்
அங்கு-இதைப்
புரிஞ்சிக்காம
போவது நீ
எங்கு.?
(இதோஎந்தன்..)
பொருள் உடலாம்
ஆவியுடன்தந்து-
அவன்
பொன்னடியைச்
சேர்வதற்குமுந்து-
அவன்
திருப்புகழை
விருப்புடனே
கேட்பான்-வேல்
முருகா.! என
வேதனையைத்
தீர்ப்பான்.!
(இதோஎந்தன்..)
🙏🍁🙏
🦚🙏🦚
முருகா முருகா
🙏