📢 JIKUNA NEWS
🎤 Reporter Prakash presenting live
தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
👉 மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 30-ந்தேதி வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
👉 கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
🌡️ அதேசமயம், இன்று முதல் 28-ந்தேதி வரை, தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2–3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
👉 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.
அதிகபட்ச வெப்பநிலை: 35–36° செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை: 28° செல்சியஸ்
👉 நாளையும் அதேபோல் மேகமூட்டம், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.
அதிகபட்ச வெப்பநிலை: 36–37° செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை: 27–28° செல்சியஸ்
⚠️ மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 28-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் மணிக்கு 40–50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
📡 இது JIKUNA NEWS, நான் உங்கள் பிரகாஷ்! #🌧️மக்களே உஷார்.. மழை அலெர்ட்!☔
00:10

